செவ்வாய், 22 மார்ச், 2011

இயற்கை அழிவை தடுக்க மனித சக்தி ஒன்றுபடல் அவசியம்


இயற்கை அழிவு அதை சார்ந்த மக்கள், சுற்றுச் சூழல் எதிர்மறை விளைவுகளுடன் பாதிக்கும் தன்மையுடைய அபாயங்களை அல்லது அச்சுறுத்தும் ஒரு நிகழ்வாகும். அழிவு சம்பவம், துன்பங்கள் அனைத்தும் மனிதர்கள் சம்பந்தப்பட்டு இருந்தால் அர்த்தமுடையதாகின்றது.

மனிதன் சுயநலம் போட்டி, பொறாமை காரணமாக இயற்கை அளித்த கொடைகளான நிலம், நீர், காற்று, ஒலி போன்றவற்றை மாசடையச் செய்கின்றான். அதை இயற்கை சமனிலைக்கு மாறான வாழ்வதற்கு தகுதியற்ற நகரமாக மாற்றுகின்றான்.
இதனால் அதிகரிக்கும் சனத்தொகை, சூழல் மாசடைதல், இயற்கை சமனிலை குழம்புதல் போன்ற தொடர்ச்சியான மாற்றங்களால் இயற்கை அனர்த்தங்கள் அதிகமாக உருவாகின்றன.
இயற்கை அழிவுகள் அதிகம் இடம்பெறக் காரணம் மனிதனின் நடத்தை பழக்கவழக்கங்களின் மாற்றங்களாகும். கிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ தமது திமேயஸ் மற்றும் கிரேட்டிஸ் எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் லிபியா மற்றும் துருக்கியில் பெரும் பகுதிகளை விட அட்லாண்டிக் தீவுகளில் முதிர்ச்சியடைந்த சமுதாயம் காணப்பட்டது.
அச் சமுதாயம் பல்தேசங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. பின் செல்வச் செழிப்பு, அதிகாரம் போன்றவற்றால் சமுதாயம் சீரழிந்தது. அதனைத் தொடர்ந்து பெரும் நில நடுக்கங்களாலும், எரிமலை சீற்றத்தாலும் அழிந்தது என்று கூறியிருந்தமை இன்று எடுத்துக்காட்டாக உள்ளது. தற்போது தொடர் வன்முறைகள், கலாசார சீரழிவுகள், பாகுபாடுகள் உலகில் எங்கும் பரவிக் காணப்படுகின்றது.
இயற்கை அனர்த்தம் மனித வாழ்வின் இயல்பு நிலையை குலைத்து இடப்பெயர்வு, மனித சொத்து சூறையாடுதல், உயிர் சேதம் போன்ற பல பகுதிகளிலும் பணக்காரன், ஏழை, மதம் என எந்த பேதமின்றி காவு கொள்கின்றது.
வாழும் வரை தான் வாழ்க்கை. அழிவு வந்தால் எல்லோரும் ஒன்றுதான். இயற்கையான அனர்த்தங்கள் பொருட்சேதம், உட்கட்டமைப்பு சேதம், வாழ்வாதார சேதம், தொழிற் சேதம் என்பன போனால் தேடிக் கொள்ளலாம். ஆனால், உயிர் போனால் திரும்பக் கிடைக்குமா? ஆனால் இன்றைய காலப் பகுதியில் இதுவும் சாத்தியமில்லை.
உலகில் ஒவ்வொரு பகுதியிலும் தொடர்ச்சியாக சுனாமி, சூறாவளி, வெப்ப பேரலை, வர்சி, ஆலங்கட்டி மழை, எரிமலை வெடிப்பு, பெரு வெள்ளம், தீ, சூரிய கிளர் ஒளிக் கற்றை, கம்மா ஒளிக்கற்றை வெடிப்பு என இயற்கை அனர்த்த கோலங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
கடந்த வாரம் யப்பானில் தொடர்ந்து மூன்று நாட்களுள் 168 தடவைகள் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது.
இந்த நிலநடுக்கமானது உலக அணுவாயுத கையிருப்பை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது தொடருமாயின் உலகமே அழிவுக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்படும் என எச்சரிக்கின்றார்கள்.
ஐக்கிய இராச்சியத்தை மையமாகக் கொண்ட சேரிட்டி ஆக்ஸ்போம் அமைப்பு பொதுப்படையாக 2015ம் ஆண்டுக்குள் 375 மில்லியனுக்கு மேற்பட்டோர் வெப்ப வானிலை சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாகியிருப்பார்கள் என்று அறிக்கையிட்டு உள்ளது.
எனவே இயற்கை மனித உயிர்கள் எஞ்சியிருந்தாலும் வரட்சி, சூழல் மாற்றம், தொற்றுநோய் அபாயம், தொடர்ந்து வாழ வளங்கள் பற்றாக்குறை என மனித எச்சங்களும் படிப்படியாக மடிந்து அழியும் நிலையை எதிர்நோக்கிக் கொண்டிருகின்றோமா என்ற கேள்வியை எழுப்புகிறது. மனித சக்தி ஒன்று சேர்ந்தால் சகல சக்திகளையும் வெல்லலாம். உலக மனித சக்தி ஒன்றுபட்டு உலகைக் காக்கப் புறப்படும் காலம் வந்துவிட்டது என்றே கூறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக