சனி, 30 ஜூன், 2012

இயற்கை அனர்த்தங்கள் அதிகரிப்பதற்கு பெரிய பங்காளி மனிதனே






காலநிலை மாற்றங்கள், கண்டங்களின் இடப்பெயர்வு, எரி கற்கள் புவியுடன் மோதுகை , எரிமலை வெடிப்புகள், கடல்கோள் என பல்வேறுபட்ட பாரிய இயற்கை அனர்த்தங்கள் மூலம் இயற்கை வளங்கள் அழிவடைந்து வருவதுடன், இயற்கைக்குரிய இயல்புகளும் மாற்றப்பட்டு வருகின்றன. இவை இயற்கையாகவே உருவாகின்றதொன்றாகவே கருதப்படுகின்ற போதிலும் அதிகளவு தடவை இவ் அனர்த்தங்கள் உருவாகுவதற்கு மனிதனின் பல்வேறு பட்ட நடவடிக்கைகளும் முக்கிய பங்காற்றுகின்றன.

விலங்குகளோடு விலங்காக நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மனிதன் இயற்கையுடன் ஒன்றி அவற்றுக்கு கட்டுப்பட்டே வாழ்ந்தான். ஆனால் புவியிலே மனிதயினம் ஓர் ஆட்சியினமாக தோன்றிய பின் தன்னை வளப்படுத்திக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டான்.

தொழில் நுட்ப புரட்சிகள் ,கைத்தொழில், நகர மயமாக்கங்கள், சனத் தொகை பெருக்கம், அணுப் பரிசோதனைகள்,காடழிப்பு என தன்னுடைய பல்வேறு தேவைகள், விருப்பங்களை நிறைவேற்ற இயற்கையை பயன்படுத்தினான். மனிதனின் இயற்கை வள அதீத பாவனை காரணமாக அவை படிப்படியாக அழிவடைந்து வருவதுடன், மனித இனத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இனி வரும் காலங்களிலாவது இயற்கை வளங்களை முறையாகவும் அவற்றின் சமனிலை பயன்படுத்த வேண்டிய தேவையுள்ள அதேவேளை, அழிவடைந்து வரும் இயற்கை வளங்களை மீண்டும் விஞ்ஞான தொழில் நுட்ப முறைகள் மூலம் விஞ்ஞானிகள் மீட்க நடவடிக்கை  எடுத்து வருகின்றமை வரவேற்கத்தக்கதாகும்.

ஆனால் சில வளங்கள் மாற்ற முடியாமலும் திரும்ப பெற முடியாத வகையிலும் பரிமாண மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எனினும் இயற்கைக் குரிய இயல்புகளுடன் மீளப் பெறுவது சந்தேகம் தான் என்றாலும் ஓரளவு இயற்கை வளத்தினை பாதுகாக்க முடியும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

 அண்மைக் காலமாக பல வகையான மண் , தாவர,  விலங்கு இனங்கள், சுற்றுச் சூழல், பல் வகைகள் பற்றி விஞ்ஞான ஆய்வுகள் அதிகளவு இடம்பெற்று வருகின்றமையால் தீர்வு நிச்சயம் கிடைக்கும் என்பதை மறுக்க முடியாது. அமிலத் தன்மையான மண்ணை நல்ல மண்ணாக மாற்றும் ஆராய்ச்சி முயற்சிகள் வெற்றி கண்டுள்ளன. பல கழிவுப்பொருட்கள் பயனுள்ள பொருட்களாக மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
 தொழில் நுட்ப முறை மூலம் சூறாவளி , பருவக் கால மாற்றம், கடல்கோள் போன்ற அனர்த்தங்களின் ஆபத்துகளை முன் கூட்டியே எதிர்வு கூறுகின்றோம்.
அதேபோல் அனர்த்தங்கள் ஏற்படாது தடுக்கும் வழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  சூறாவளி வேகத்திலுள்ள சக்தியில் எமக்குத் தேவையான பல வருடக்கணக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இந்நிலையில் சூறாவளியின் மையப் பகுதிக்கு சென்று அதன் மையத்தில் சில உப்புகளை போட்டு வேகத்தை குறைக்கும் முயற்சியில் அமெரிக்க வான் படையினர் ஈடுபட்டுள்ளார். அத்துடன் நிலநடுக்கத்தால் வரும் சேதங்களை குறைக்கும் தொழில் நுட்ப முறைகளும் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக ஜப்பான் , தாய்வான், இந்தியா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந் நிலையில் இலங்கையிலும் அனர்த்தங்களால் பாதிக்கப்படாத வகையிலே தொழில்  நுட்பங்களை கொண்டு கட்டிடங்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பாரிய வெள்ளப் பெருக்கை கட்டுப்படுதுகின்றன. மண் சரிவினையும் தொழில்நுட்ப முறைகள் மூலம் தடுக்கின்றனர். சாதாரணமாக மேல் இருக்கும் மண் படையும் கீழ் இருக்கும் படையும் ஒன்றுக் கொன்று விசையினால் ஒட்டிக் கொண்டு இருக்கின்றன. அந்தவிசை விலகும் போதே மண் சரிவு ஏற்படுகின்றது. இவ் விசையினை அதிகரிக்க புவித்துணிகள் (எஞுணி கூஞுதுtடிடூஞு)  என்னும் உபகரணத்தை புதைக்கின்றனர். இதனால் மண் அடுக்குகளுக்கிடையே விசை விலகாது இருக்கும்.  இதற்கான செலவு தற்பொழுது மிக அதிகமாக உள்ள போதிலும் எதிர்காலங்களில் குறைந்த செலவில் சாத்தியமாகலாம்.
ஐரோப்பாவில் பல இடங்களில் நிலக்கரி, உலோக கனிய அகழ்வுகளால் பாழடைந்து அழிந்து போன பகுதிகளை மீளச் சீரமைத்துள்ளனர். அத்துடன் பாலைவனப் பகுதிகளையும் இயற்கை மரங்கள் கொண்ட பிரதேசமாக மாற்றும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை தண்ணீர் பற்றாக்குறைகளையும் நிவர்த்தி செய்ய பல விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தினமும் வெளியேற்றும் கழிவு நீர் பல்வேறு தொழில் நுட்ப முறைகளின் ஊடாக சுத்தப்படுத்தப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் நீர் பற்றாக்குறை மட்டுமன்றி நதிகள், குளங்கள், ஏரிகளிலுள்ள நீரும் கழிவு நீர் சேராது தூய்மையாக இருக்கும்.
 மாசடைந்து அழிவடைந்து வருகின்ற இயற்கை வளங்களான நீர், நிலம், காற்று போன்றவற்றை விஞ்ஞான முறைகள் மூலம் புதுப்பித்து மீள உருவாக்குகின்ற விஞ்ஞானிகள் மனித நடவடிக்கைகளால் அழிவடைந்த தாவர ,விலங்குகளையும் மீளவும் உருவாக்கும் முயற்சியையும் கைவிடவில்லை. அழிவடைந்து வரும் தாவர ,விலங்குகளின் கலம் , இழையங்கள் என்பவற்றை கொண்டு இழைய வளர்ப்பு, குளோனிங், சோதனை குழாய் என பல்வேறு விஞ்ஞான தொழில்நுட்ப முறைகளை கொண்டு  உருவாக்கி  சாதனை படைக்கின்றனர். முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்ட மிருக, தாவர இனங்கள் மீண்டும் உருவாக்குவதென்பது கொஞ்சம் சந்தேகமாக இருந்தாலும் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முற்றாக அழிவடைந்த மமூத் என்னும் பெரிய உரோமங்களால் போர்க்கப்பட்ட யானை இனத்தினை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளமையானது இதற்கு சான்று பகர்கின்றது.
 எனவே, நவீன விஞ்ஞானத் தொழில் நுட்ப உயிரியல் முறைமைகள் மூலம் இயற்கையின் பல வளங்களைத் திருப்பி உண்டாக்க முடியும். புதியதாக படைக்கப்படும் வளங்கள் புதிய பரிணாம வழிகளில் இயற்கையோடு இணைந்து எம்முடன் இயற்கை வளங்களாக பயணிக்கும் என்பது திண்ணம்.

சுமித்திரை

எக்ஸ்ரேயைவிட எளிமையான சிறுநீர் பரிசோதனை மூலம் அதிக தகவல்கள்




 அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிப்பு

எலும்புகளில்ற ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் எக்ஸ் கதிர்களை விட எளிய சிறுநீர் பரிசோதனை மூலம் அதிகளவிலான தகவல்கள் வெளிப்படுத்தப்படுமென அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நாசா நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவினை கடந்த வாரம் ஆய்வாளர்கள் வெளியிட்டிருந்தனர்.

 விண்வெளி பயணங்களின் போது விண்வெளி வீரர்கள் தமது உடல் எலும்புகள் இல்லாதது போன்ற பாரமற்ற நிலைமையை உணர்வதற்கு அவர்களுடைய விண்வெளிக்கு பயன்படுத்தப்படும் உடைகளுடன் இத் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது. எலும்புகளில் தாக்கும் புற்று நோயிலிருந்தோ அல்லது எலும்பு தேய்வுகளிலிருந்தோ பாதிக்கப்படும் நோயாளிகள் பல்வேறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர்.

 ஏற்கனவே, அதிக எண்ணிக்கையான எலும்பு இழப்பு ஏற்பட்ட போதோ அல்லது எலும்பு தேய்வினை எதிர்கொள்ள நேரிடும் போதோ இப் பரிசோதனை மூலம் தீர்வு பெற முடியுமென அரிசோனா பிராந்திய பல்கலைக்கழகத்தின் உயிரி இரசாயனவியல் மற்றும் இரசாயனவியல் பேராசிரியரும், சிரேஷ்ட எழுத்தாளருமான அரில் அன்பர் தெரிவித்துள்ளார்.

இவற்றில் சிலவற்றை புதிதாக இணைத்து விரிவாக்கியுள்ளோம். இதில் தொழில் நிபுணத்துவம் இல்லை. நாசாவின் மூதலீட்டுடனான பணி எங்களுடைய ஆராய்ச்சியின் ஊடாக சிறப்பான விளைவு கிடைத்துள்ளதென பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

திணிவில் வேறுபட்ட மூலக் கூறு அணுக்களின் அடிப்படையிலே கல்சியம் கணியங்களின் படிமுறைகள் அளவிடப்படுகின்றன. கனியுப்புக்களின் சமநிலையினை அடிப்படையாக கொண்டு குறிப்பிட்ட எலும்பிற்கு பலத்தினை நோயாளியின் சீறுநீர் ஊடாக கனியங்கள் பரிமாற்றப்படுகின்றன.

அறிவியலின் சிக்கல்களுக்கு கணித ரீதியில் விடையளித்த ஜன்ஸ்டீன்

 நாளை ஜன்ஸ்டீனின்

133 ஆவது பிறந்த தினம்

சா .சுமித்திரை

20 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற இயற்பியல் மாமேதையான ஆல்பர்ட் ஜன்ஸ்டீனின்  133 ஆவது பிறந்தநாள் நாளையாகும். 1879 ஆம் ஆண்டு மார்ச்  14 ஆம் திகதி பிறந்த இவர் சார்புக் கோட்பாட்டை முன் வைத்ததுடன் குவாண்டம் பொறிமுறை, புள்ளியியற் பொறிமுறை, அண்டவியல் என்பவற்றில் பாரிய பங்களிப்பை செய்து அறிவியல் உலகிற்கு சேவையாற்றியுள்ளார்.

 ஒளிமின் விளைவைக் கண்டு பிடித்து விளக்கியதுடன், சார்புக் கோட்பாட்டுக் கொள்கையையும் முன் வைத்தமையால் ஜன்ஸ்டீன் என்ற பெயர் இன்றைய காலத்திலும் பேசப்படுகிறது.

அதே வேளை 1999 இல் புத்தாயிரமாம் ஆண்டு குறித்து ரைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட சிறப்பிதழில் ஜன்ஸ்டீனுக்கு இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர் என்னும் பெயரை வழங்கிக் கௌரவித்திருந்தது.

 ஜெர்மனியில் வுர்ட்டெம்பர்க் உள்ள உல்ம் என்னும் நகரில் ஹேர்மன் ஜன்ஸ்டீன், போலின் கோச் தம்பதிகளுக்கு மகனாக பிறந்த ஜன்ஸ்டீன் சிறு வயது முதலே கணிதம், அறிவியல் துறைகளில் அதிகளவு ஆர்வம் காட்டி வந்தார். இவருக்கு ஐந்து வயதாக இருக்கும் போது ஒரு முறை இவரது தந்தை ஒரு சட்டைப் பையில் வைக்கக் கூடிய திசை காட்டியொன்றைக் கொடுத்தார். அவ் வயதிலேயே காந்த ஊசியில் ஏதோவொரு தாக்கம் உருவானதைப் புரிந்து கொண்டதுடன் மாதிரியுருக்களையும், இயந்திரக் கருவிகளையும் பொழுது போக்காக வடிவமைத்து வந்தார்.

1896 இல் பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்ட ஜன்ஸ்டீன் சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரிலுள்ள பல் தொழில் நுட்பக் பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி கற்றார். தொடர்ந்து படிப்பு முடிந்தும் படிப்புக் கேற்ற வேலை கிடைக்காமையால் சுவிஸ் காப்புரிமை அலுவலகத்தில் தொழில் நுட்ப உதவிப் பரிசோதகராக இணைந்து கொண்டு தனது மேலதிக நேரத்தில் கணித ஆராய்ச்சிப்  பணிகளைத் தொடர்ந்தார்.

1905 ஆம் ஆண்டு ஜன்ஸ்டீனால் எழுதி வெளிவந்த முதலாவது ஆய்வுக் கட்டுரையில் " நிலையான திரவத்தில்  தொங்கும் மிகச் சிறிய துணிக்கைகளின் வெப்ப மூலக் கூற்றுக் கொள்கையினால் தொழிற்படும் இயக்கத்தில்" என பிரௌனியன் இயக்கம் தொடர்பான ஆராய்ச்சியை விபரித்திருந்தார். அப்போது சர்ச்சைக்குள்ளாகியிருந்த திரவ இயக்கவியலை பயன்படுத்தி அணுக்கள் இருப்பதற்கான அனுமான ரீதியான ஆதாரமாகக் கொள்ளலாம் என இக்கட்டுரை மூலம் நிறுவியிருந்நார். அதே வேளை அப்போது சர்ச்சையிலிருந்த இன்னொரு கொள்கையான புள்ளி விபரப் பொறிமுறையினையும் (குtச்tடிண்tடிஞிச்டூ  Mஞுஞிடச்ணடிஞிண்) இக்கட்டுரையில் தெளிவு படுத்தியிருந்தார்.

அக்காலத்தில் அணுக்கள் என்பது ஒரு பயன்பாட்டுக் கோட்பாடாகவே அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் கூட அணுக்களின் நிலவுகை தொடர்பான பாரிய விவாதங்களும் நடைபெற்று வந்தன.  அந்நிலையிலேயே அணுக் கொள்கை தொடர்பான ஜன்ஸ்டீனின் புள்ளி விபர ரீதியான விளக்கத்தின் மூலம் எளிய நுணுக்குக் காட்டியினூடாக  அணுக்களை எண்ணும் வாய்ப்பு ஆய்வாளர்களுக்கு கிடைத்தன எனலாம்.

 விஞ்ஞானி வில்கெலம் ஒஸ்ட்வால்ட் அணுவுக்கெதிரான கொள்கையை கொண்டிருந்தார். இவர் ஜன்ஸ்டினின் பிரௌனியன் இயக்கம் தொடர்பான தெளிவான விளக்கம் காரணமாகத்தான் அணு தொடர்பான நம்பிக்கையை பெற்றதாக தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருந்தார்.

 அதே போல ஜன்ஸ்டீன் இரண்டாவது ஆய்வுக் கட்டுரையில் " ஒளியின் உற்பத்தி மற்றும் மாற்றீடு தொடர்பான ஓர் ஆய்வு ரீதியான நோக்கம் ( Oண ச் ஏஞுதணூடிண்tடிஞி ஙடிஞுதீணீணிடிணt இணிணஞிஞுணூணடிணஞ் tடஞு கணூணிஞீதஞிtடிணிண ச்ணஞீ கூணூச்ணண்ஞூணிணூட்ச்tடிணிண ணிஞூ ஃடிஞ்டt) என்னும் ஒளிச்சக்தி  சொட்டு (ஃடிஞ்டt ஞ்தச்ணtச்)  கருது கோளை முன்வைத்ததுடன் இது எவ்வாறு ஒளிமின் விளைவு போன்ற விடயங்களை விளக்க உபயோகிக்கலாம் எனவும் விபரித்துள்ளார்.

 இக் கருது கோளில் ஒளிச் சக்தி  ஒரு குறித்த அளவுடைய தொடர்ச்சியற்ற சக்திச் சொட்டுக்களாகவே உறிஞ்சப்படவோ, கடத்தப்படவோ முடியுமென கருதும் போது மாக்ஸ் பிளாங்கின் கரும் பொருட் கதிர்ப்பு விதியையும்

இவ் ஆய்வுக் கட்டுரை வலுப்படுத்தியது. ஒளி உண்மையில் தனித்தனி சக்திப் பொட்டலங்களாலேயே உருவாக்கப்பட்டது என்ற கொள்கை மூலம் ஜன்ஸ்டீனினால் மர்மமாகவிருந்த ஒளிமின் விளைவை விளக்க முடிந்தது எனலாம்.

 ஒளியின் சக்திச் சொட்டு கருது கோளானது ஜேம்ஸ் மாக்ஸ்வெல்லின் மின் காந்த இயக்கத்துக்கான சமன்பாட்டினால் பெறப்படும் ஒளியின் அலைக்கொள்கை யோடு முரண்பட்டிருந்ததுடன் பௌதீகத் தொகுதியிலுள்ள சக்தி துணிக்கைகளை மேலும் மேலும் பிரிக்க முடியும் என்ற கருத்தும் முரண்பட்டன. எனவே தான் ஜன்ஸ்டீனின் ஒளியின் விளைவுக்கான சமன் பாடுகள் மிகச் சரியானவை என பரிசோதனைகள் மூலம் நிரூபித்த பின்னரும் கூட அவரது சமன்பாட்டுக்கான விளக்கத்தை எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.  எனினும் ஒளி மின்னியலில் அவருடைய உழைப்பு  வியந்துரைக்கப்பட்ட பின்னரே பெரும்பாலான பௌதீகவியலாளர்கள் அவருடைய சமன்பாடு சரி எனவும் சாத்தியம் எனவும் ஏற்றுக் கொண்டதுடன் 1921 ஆம் ஆண்டு இதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஜன்ஸ்டீனின் சக்திச் சொட்டுக் கொள்கை ஒளியின் அலைத் துணிக்கையின் இரட்டைத்தன்மை அதாவது பௌதிகத் தொகுதியின் அலைத் தன்மை, துணிக்கைத் தன்மை என இரு வேறு பட்ட இயல்புகளை காட்ட வல்லன என்ற கருத்தினை வலியுறுத்து கின்றது.

 அதேபோல அவருடைய மூன்றாவது ஆய்வுக் கட்டுரை இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல் என்னும் தலைப்பில் அமைந்திருந்தன. இக்கட்டுரையில் நேரம், தூரம், திணிவு, சக்தி தொடர்பான விஷேட தொடர்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியதுடன் மின் காந்தவியலுடன் தொடர்புபட்டதாகவும் , புவியீர்ப்பு விசையை தவிர்த்தும் எழுதியிருந்தார்.
மைக்கல்சன் மோர்லி பரிசோதனையில் (Mடிஞிடஞுடூண்ணிண - Mணிணூடூஞுதூ ஞுதுணீஞுணூடிட்ஞுணt) ஒளியலை பயணம் செய்ய நீர், காற்று போன்ற ஊடகம் அவசியம் இல்லை என்பதை நிரூபித்த போது உருவான குழப்பத்தை இவருடைய விஷேட தொடர்புக் கொள்கை தீர்த்து வைத்தது. இதன் மூலமே ஒளியின் வேகம் மாறாத அதே வேளை அது அவதானியின் இயக்கத்தில் தங்கியதல்ல என்பது நிரூபணமானது. அதே போல எத்தனையோ விஞ்ஞானிகளின் பரிசோதனை ஊகங்களை இவருடைய கணித சமன்பாடுகள் தீர்த்து வைத்தன என்பதை அறிவியல் சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கணித திறமை கொண்ட ஒரு கோட்பாடு இயற்பியல் அறிஞராக விளங்கிய ஜன்ஸ்டீன் தனது வாழ்வில் அதிகளவான பகுதியை அறிவியலுக்காக அர்ப்பணித்தார். அறிவியலின் சிக்கல்களுக்கு கணித ரீதியில் விடையளித்த ஜன்ஸ்டீன் 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதி தனது 76 ஆவது வயதில் இவ்வுலகிலிருந்து விடைபெற்றார்.

மம்மிகள் பதப்படுத்தப்படும் முறையை மருத்துவ பரிசோதனை மூலம் நிரூபிக்க முயற்சி







இத்தாலியில் மம்மிகள்  பதப்படுத்தப்பட்ட முறையினை மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் நிரூபித்துக் காட்டுவதற்காக 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த மம்மிகளைத் தோண்டியெடுத்த ஆய்வில் ஈடுபடுத்தியுள்ளனர்.

பண்டைய நாகரிகங்களில் குறிப்பாக எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் போன்ற பெரும் தலைவர்கள் இறக்கும் போது அவர்களின் உடல் பழுதடையாது பல ஆயிரம் ஆண்டுகள் இருக்குமாறு விசேடமாக பதப்படுத்தப்பட்டு அதற்குரிய பேழையினுள் வைத்து புதைப்பார்கள். இம்முறை மூலம் இவை பல ஆண்டு காலம் பழுதடையாமலும் துர்மணம் வீசாமலும் இருப்பதற்கான மர்மம் இன்றைய காலம் வரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே தான் தற்போது அதற்கான ஆராய்ச்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இத்தாலியில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 5 மம்மிகளின் உடல்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  விரோனா நகரிலுள்ள டிசென்ஸனோ வைத்தியசாலையில் அவை பாதுகாக்கப்பட்டு வரப்படுகின்றது. எனினும் 5 மம்மிகளின் உடல்களின் பல பகுதிகள் இன்னும் கிடைக்கவில்லை. அவற்றில் கழுத்துகளுடன் கூடிய 5 தலைகள், ஒரு இதயம் மற்றும் 2 உடல்கள் ஆகியவையே கிடைத்துள்ளன.

இந்த மம்மிகளின் தலையிலுள்ள இரத்தக் குழாய்களான நாடி, நாளம் மற்றும் தசையிழையங்கள் என்பவற்றை ஆராய்ச்சி நிபுணர் ஜியேவன் பட்டிஸ்ரா ரினி தனித்தனி மாதிரிகளாக எடுத்து ஆய்விற்குட்படுத்தி வருகின்றார்.

இம்மம்மிகளின் உடல்கள் எவ்வாறு பதப்படுத்தி பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதை அவர்கள் எடுத்து வைத்திருக்கும் மாதிரிகளை சி.ரிஸ்கேன், எக்ஸ்ரே கதிர் வீச்சு என்பவற்றின் ஊடாக பரிசோதிக்கப்பட்டு வரப்படுவதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

இம்மாதிரிகளின் பரிசோதனை மூலம் இரசம், ஆர்சனிக் ஆகிய இரசாயனப் பொருட்களை ஊசி மூலம் உடலில் செலுத்தியோ அல்லது உடல்களை இவ்விரசாயனப் பொருட்களில் புதைத்தோ பதப்படுத்தியோ பாதுகாக்கப்பட்டிருக்கின்றமையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவ்விசானப் பொருட்களைக் கொண்டு பதப்படுத்தியுள்ளமையால," இதுவரை கண்டுபிடித்து எடுக்கப்பட்ட மம்மிகளை விட தற்போது கிடைத்துள்ள மம்மிகளின் உடல் பாகங்கள் அதிக தடிப்பாக உள்ளன எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மம்மிகளுக்கு செயற்கை பற்கள், கண்கள் மற்றும் முடி ஆகியவற்றைப் பொருத்தி மேலதிக ஆராய்ச்சிகளையும் மருத்துவ படிப்பினையும் மேற்கொள்ள உள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

19 ஆம் நூற்றாண்டகளின் மனித உடல்களை பாதுகாக்க சிலிக்கன் டைஒக்சைட்டு, சல்பர், சுண்ணாம்பு என்பவற்றையே  பயன்படுத்தி வந்துள்ளனர். எனினும் இத்தாலியில் தோண்டியெடுக்கப்பட்ட மம்மிகளில் இரசம், ஆர்சனிக் போன்ற இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வுடல்களைப் பதப்படுத்தும் பயன்படுத்திய மருத்துவ முறைகள் இன்றைய மருத்துவ வளர்ச்சிக்கு சவாலாகவும் அமையலாம்.

 சுமித்திரை

புதையல் தோண்டும் மர்மம்

 -சா .சுமித்திரை -

அண்மைக் காலமாக அதிகரித்து வரும் குற்றச் செயல்களில் புதையல் தோண்டுதல் தொடர்பான சம்பவங்களும் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. எந்தவொரு ஊடகங்களின் செய்திகளை அவதானித்தாலும் புதையல் தோண்டுதல் தொடர்பான செய்திகள் ஏதோவொரு வகையிலே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.


அண்மையில் அம்பன்பொல மற்றும் மதவாச்சியில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த 11 பேரை  சம்பவ இடங்களில் வைத்தே பொலிஸார் கைது செய்துள்ளனர். அதேபோல் கடந்த வாரம் ஆனமடுவவில் உப்பலாவத்தைப் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்தவர்களை பொலிஸார் கைது செய்தனர். அத்துடன் புதையல் தோண்டுவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்த இடத்தில் நரபலி கொடுப்பதற்காக சில விலங்குகளை அடைத்து வைத்திருந்ததுடன் மந்திரப் புத்தகமொன்றும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.


அதேபோல புதையல் தோண்டுவதற்கு முன் மனித நரபலிகொடுக்கவென வாழைச்சேனையில் வானொன்றில் கடத்திச் செல்லப்பட்ட சிறுவனை பொலிஸார் மீட்டுள்ளதுடன், கடத்தல்காரர்களையும் மடக்கிப் பிடித்துள்ளனர். அத்துடன் அச்சிறுவனைக் கடத்துவதற்கு சில நாட்களுக்கு முன்பு கல்குடாவிலும் அக் குழுவினர் சிறுமியொருவரை கடத்த முயற்சித்த போதும் அச்சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருந்தார்.


இச்சம்பவங்களையடுத்து பொதுமக்கள் மத்தியிலே மிகுந்த பதற்றமும் அச்சமும் காணப்படுவதுடன் தமது பிள்ளைகளை பாடசாலைக்கோ, கல்வி நிறுவனங்களுக்கோ அனுப்புவதற்குக் கூட தயக்கம் காட்டி வருகின்றனர். அதேவேளை, தாங்களும் வீடுகளை வீட்டு வெளியேறுவதற்கு பயப்படுகின்றனர்.


புதையல் தோண்டும் கொள்ளையர்களில் சிலர் மந்திரவாதிகளின் ஆலோசனைகளைப் பெற்று இந்த இளம் பாலகர்களை கடத்திச் சென்று படுகொலை செய்து அவர்களின் இரத்தத்தையும் சில உடற்பாகங்களையும் புதையல் தோண்டும் முயற்சிக்காகப் பயன்படுத்துகின்றனர். இதனால் அப்பாதகர்களுக்கு புதையலோ, பொக்கிஷமோ கிடைக்கின்றதோ இல்லையோ ஆனால், இக்குழந்தைகளின் உயிர்களின் பெறுமதியையோ அச்சிறுவர்களினது பெற்றோர்களின் வாழ்நாள் உயிர்த்துடிப்புகளையோ இவர்கள் அறிந்து கொள்ளப் போவதில்லை. மிகக் கொடுமையான செயலாகும்.


காணாமல் போகும் எத்தனையோ குழந்தைகளின் உயிர்கள் இந்தப் புதையல் கொள்ளையர்களிடம் பறிபோகும் பல சம்பவங்கள் திரைக்கு மறைவிலே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.


நாட்டிலே அத்தியாவசியப் பொருட்கள், எரி பொருட்களின் விலையேற்றம் என்பவற்றால் திருட்டு, கொலை, மோதல், வன்முறைகள் என பல வகையான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. எனவேதான் புதையல் தோண்டுதல் என்பது இன்று அநேகமானோர்களின் சுயதொழிலாக உள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அவர் எந்த நோக்கத்தில் தெரிவித்திருந்தாரோ தெரியவில்லை. எனினும் அவரது பேச்சில் ஒரு உண்மையுள்ளமை தெளிவாகத் தெரிகின்றது.


கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கதிர்காமம் லுணுகம்வெகரப் பகுதியில் பெறுமதியான மாணிக்கக் கற்கள் கிடைப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்தே புதையல் தோண்டும சம்பவங்களும் அதிகளவில் இடம்பெறத் தொடங்கியுள்ளன. இவ்வாறு களுகங்கைப் பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 16 பேரை ஹொரணை விசேட அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன், அகழ்வுக்கென பயன்படுத்திய உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.


இதேவேளை, புதையல் தோண்டிய சம்பவங்கள் தொடர்பாக கடந்த 4 மாதங்களில் மட்டும் 110 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 352 பேர் சந்தேகத்தின் பேரில் கைதும் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கிழக்கு, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலேயே புதையல் தோண்டும் குற்றச் செயல்கள் அதிகளவு இடம்பெற்று வருகின்றன.


கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் இன்று வரையான கால இடைவெளியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புதையல் தோண்டிய 250 சம்பவங்களும் 522 தேவையற்ற அகழ்வுச் சம்பவங்களும் பதிவாகியுள்ள அதேவேளை இச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட 1381 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பால சூரிய தெரிவித்தார். அதிலும் குறிப்பாக குடும்ப அங்கத்தவர்களும் உறவினர்களும் இணைந்தே புதையல் தோண்டும்  நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.


இதேவேளை கடந்த 2010 ஆம் ஆண்டுக்குப் பின் கிட்டத்தட்ட 2 வருடங்களில் தொல்பொருட்களை சேதப்படுத்தியமை, அவற்றினை திருடி விற்பறமை புதையல் தோண்டியமை என பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் 40 மில்லியன் ரூபா தண்டப்பணமாக அறிவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.


புதையலென்பது இயற்கையானதென்றும் புதையல் கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் எனவும் சிலர் நினைக்கலாம். அதேபோல் பெரிய குடங்கள் பானைகளினுள் தங்கக் காசுகள், வைர நகைகள், மாணிக்கக் கற்கள் நிரப்பப்பட்டு மண்ணினுள் புதைத்து காணப்படுவதுதான் புதையல் எனவும் சிலர் நினைக்கலாம். ஆனால், அவர்கள் நினைப்பது சரியென்றாலும் புராதன விக்கிரகங்கள், சிலைகள் போன்ற தொல்பொருட்களும் ஒரு புதையலாகும். புராதன காலம் தொட்டே புதையல் என்பது முக்கியமானதொரு இடத்தைப் பெற்றுள்ளது. நாம் சிறுவயது முதலே  இத்தகைய புதையல் தொடர்பான சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்வுகள்  மற்றும் கதைகளை பெரியவர்களின் பேச்சுக்களின் போதோ, வரலாற்று ஏட்டுச் சுவடுகள் மூலமாகவோ அல்லது மதத் தலைவர்களது பிரசங்கங்கள மூலமாகவோ அறிந்து வந்துள்ளோம்.


மன்னர் கால ஆட்சிகளின் போது தமது எதிர்கால சந்ததியினர் ஏதேனும் கஷ்டங்களோ பஞ்சங்களோ ஏற்படுமாயின் இவற்றினை எடுத்துப் பயன்பெற வேண்டுமென பெறுமதியான பொருட்கள், ஆபரணங்கள், தங்க நாணயங்கள் என்பவற்றை ஏதாவது ஒரு பானையிலோ பெட்டிகளிலோ போட்டு புதைத்து விடுவார்கள்.  அத்துடன் அதனைப்பற்றி சுவடுகளிலோ அல்லது பாறைகளிலோ எழுதிப் பொறித்து விடுவார்கள்.
அதேவேளை, சில மன்னர்கள் தமது ஆட்சிக் காலத்தில் இடம்பெறும் யுத்தங்களின் போது தமது சொத்துகளைப் பாதுகாக்க தடயங்களை வைத்தோ அல்லது குறிப்புகளை வைத்தோ புதைத்து விடுவார்கள். எனினும் இவர்கள் அவற்றினை மீண்டும் பெறாது இறந்துவிட்டால் அவை பல தசாப்தங்களாக மண்ணினுள் புதைந்து காணப்படும். அநேகமாக இலங்கையைப் பொறுத்தவரை புதையல் தொடர்பான தகவல்கள் அக்காலங்களில் ஓலைச்சுவடிகளிலும் கற்பாறைகளிலும் பாலி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. 
மன்னர்கள் வாழ்ந்ததாக வரலாற்றில் கூறப்படும் இடங்களைத் தேடியறிந்தும் சில பிக்குகள் போன்ற மதத் தலைவர்களின் ஆதரவுடன் ஓலைச் சுவடிகளிலும் சுவடுகளிலும் பொறிக்கப்பட்ட தகவல்களை பெற்றும் புதையல்களைத் தேடி தோண்ட முற்படுகின்றனர். மேலும் சிலர் மந்திரவாதிகள், ஜோதிடர்களின் பின் நாயாக பேயாக அலைந்து திரிந்து அவர்களிடம் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் பெற்று புதையல் தோண்டுகின்றனர். இதனால் தான் காட்டுப் பகுதிகளில் தனிமையான இடங்களிலுள்ள குகைகள், பெரிய பொந்துகள், பழைமை வாய்ந்த விகாரைகள், இந்து ஆலயங்கள், வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்கள் என புதையல் தோண்டும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
மதத் தலங்களைக் கூட விட்டு வைக்காத இந்த புதையல் கொள்ளையர்கள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பொலநறுவையில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலினை முற்றுமுழுதாக சேதடுத்தியுள்ளதுடன், கோயிலின் மூலஸ்தானத்திலுள்ள சிவனுக்கு கீழே கிட்டத்தட்ட 3 1/2  அடி ஆழத்திற்கு பாரிய குழி தோண்டியுள்ளனர். இதனை விட இக்குழி எப்பொழுது தோண்டப்பட்டது என்பது கோயில் நிர்வாகத்திற்கே தெரியாததொன்றாகவுள்ளது. இதனைப் போல இந்து ஆலயங்கள், விகாரைகளை இலக்கு வைக்கும் இந்த புதையல் கொள்ளையர்களால் கடவுள்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.






புதையல் எடுப்பதற்காக மதத்தலங்களும் தொல் பொருட்களும் சேதமாக்கப்படுகின்றன. அத்துடன் புதையல் தோண்டுபவர்கள் புதையல் தோண்டுவதற்காக பாரிய உபகரணங்களையும் பயன்படுத்துகின்றனர். அரசியல்வாதிகள் பாதுகாப்புத் தரப்பினர் சிலர் பின்னணியில் இருந்து செயற்படுகின்றமையால் இந்தக் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் சுலபமானதொன்றல்ல.
விலச்சி பகுதியில் இடம்பெற்ற புதையல் தோண்டும் நடவடிக்கையில் இராணுவத்தின் விசேட அதிரடிப்படையினர் இணைந்து புதையல் தோண்டியதாகவும் புதையல் தோண்டுவதற்காக பாரிய குழி தோண்டும் இயந்திரமான பெக்கோ பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதையல் தோண்டும் முயற்சிக்கு விடேச அதிரடிப்படையினரை அனுப்பியது தான்  என பொலிஸ் மா அதிபரும் தெரிவித்துள்ளார்.
எனவேதான் புதையல் தோண்டும் சம்பவங்களின் பின்னணியில் பலம்வாய்ந்த அரசியல்வாதிகளும் சில தொழிலதிபர்களும் உள்ளதால் இவர்கள் சட்டத்தின் பிடியில்சிக்கமாட்டார்கள் என அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்க தேரர் உடுகம  ஸ்ரீ புத்திரகித்த தேரர் தெரிவித்துள்ளார்.
எனவே புதையல் தோண்டுபவர்களின் பின்னணியில் இருந்து செயற்படுபவர்களே முதலில் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.  அத்துடன் புதையல் தோண்டுபவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி அபராதம் மட்டும் விதிக்காது கடுமையான சிறைத் தண்டனைகளும் வழங்கப்பட வேண்டும்.
எமது நாட்டின் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாத்து வைத்திருக்கும் இடங்களில் ஒன்றான கொழும்பு தொல்பொருட் காட்சியகத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாரம்பரியதும், மிகப் பெறுமதி வாய்ந்ததுமான அரச உடைமையான தொல் பொருட்கள் திருடப்பட்டுள்ளன. எனினும் இதுவரை இந்தத் திருட்டுப் போன பொருட்கள் எங்கு உள்ளன? யார் திருடினார்கள் என்பது தொடர்பில் எந்தத் தகவல்களும் இல்லை. இவ்வாறான பொருட்கள் திருடப்படுகின்றமை மூலம் நாம் எமது நாட்டின் வரலாற்றுப் பொக்கிஷங்களையும் பாரம்பரியங்களையும் தொலைக்கின்றோம் என்றுதான் கூறவேண்டும்.
நாட்டுக்கே உரிய 2500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த'" பொருட்களை இவ்வாறு திருடுவதோ சேதப்படுத்துவதோ அல்லது விற்பதோ நாட்டுக்கு செய்யும் துரோகமாகும். இந்த விலைமதிப்பற்ற புராதன பொக்கிஷங்களை பாதுகாப்பதற்கு தொல்பொருள் ஆய்வாளர்களும் பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து செயற்படுவதுடன் தொல் பொருட்கள் உள்ளதாகக் கருதப்படும் இடங்கள். வைக்கப்பட்டிருக்கும் இடங்களின் பாதுகாப்புகளையும் பலப்படுத்த வேண்டும். இதன் மூலமே புதையல் கொள்கையர்களிடமிருந்து எமது வரலாற்றுப் பொக்கிஷங்களை பாதுகாக்க முடியும்.

செயற்கை உயிரியல் எதிர்ப்புகளும் எதிர்பார்ப்புகளும்






சா.சுமித்திரை

 படைப்பு இறைவனின் அருள் என்ற நிலை மாறி மனிதனாலும் உயிர்களை உருவாக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டமையே அறிவியலின் உச்சம் எனலாம்.

 கோயில்களையும் வேப்பமரங்களையும் சுற்றி வந்த பெண்களை மருத்துவமனையின் ஆய்வுக் கூடங்களை நோக்கி இழுத்து வந்தது அறிவியலின் இந்த மகத்தான கண்டுபிடிப்பு !

உலகிலே கருத்தரிப்பு முறைகளிலே கடந்த 60 வருடங்களுக்கு மேலாக பல்வேறு சோதனைகள் மூலம் மாற்றங்களும் முன்னேற்றங்களும் இடம்பெற்று இயற்கைப் படைப்புக்களை குளோனிங் (பல் படியாக்கம்) முறையிலே உருவாக்கும் நிலை பற்றி சிந்திக்கும் அளவுக்கு அறிவியல் தொழில் நுட்பம் முன்னேறியுள்ளது.

அதாவது சோதனைக் குழாய் மூலமும், வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெறலாம் என்பதை நிரூபித்துக் காட்டியதுடன் அவை இன்றைய காலத்திலே சாதாரணதொரு மருத்துவத்துறையாகவும் சாதாரண மக்கள் பின்பற்றும் வழிமுறையாகவும் காணப்படுகின்றது. தொடர்ந்து அனைத்து இன உயிரினங்களையும் பல் படியாக்கம் (இடூணிணடிணஞ்)  முறையிலே உருவாக்கலாம் என்பதை உறுதிறபட செய்து காட்டியுள்ளமை அறிவியல் மருத்துவத் துறைக்கு ஒரு மைல்  கல்லாகும்.

மிக அண்மையில் பஷ்மினா இனத்தைச் சேர்ந்த வெள்ளாடொன்றினை குளோனிங் முறைகளைப் பின்பற்றி அதன் நகலாக ஒரு ஆட்டுக் குட்டி ஒன்றினை இந்தியாவின் காஷ்மீர் வேளாண்மை விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ரிபாய் அகமது ஷா தலைமையிலான குழுவினர் உருவாக்கியிருந்தனர். இந்த வெள்ளாட்டுக் குட்டிக்கு நூரி என்று பெயரிடப்பட்டுள்ளதுடன் 1.3 கிலோ எடையுடன் இது ஆரோக்கியமாக உள்ளதுடன் குளோனிங் முறையிலே முதன் முதலாக உருவாக்கப்பட்ட வெள்ளாடு இதுவேயாகும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

21 ஆம் நூற்றாண்டின் உயிரியலின் சாதனையாகவுள்ள பல் படியாக்க முறை மூலம் பறவைகள், விலங்குகள் , தாவரங்கள் மட்டுமன்றி மனிதர்களைக் கூட உருவாக்க முடியும். பல் படியாக்கம் செய்யப்படும் உயிரங்கியின் உடலியல் வேறுபாடோ அல்லது அவற்றின் குணயில்யபு வேறுபாடுகளோ எதுவுமின்றி அவ் வங்கியை ஒத்த இன்னொரு அங்கியை உருவாக்குவது குளோனிங்காகும்.

அதாவது ஆணின் உயிரணு மூலமாக உருவாக்கப்படும் உயிர் அந்த ஆணின் பிரதியாகவும் ஒரு பெண்ணின் உயிரணு மூலமாக உருவாக்கப்படும் உயிர் அப் பெண்ணில் நகலாகவும் காணப்படும்.

ஒரு ஆணும் பெண்ணும் இணையாமல் ஒரு ஆணின் உயிரணுவையோ அல்லது பெண்ணின் உயிரணுவையோ கொண்டு உருவாக்கும் உயிரே குளோனிங் முறையில் உருவான உயிரினமாக கருதப்படும்.

1996 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிவியல் வரலாற்றிலே ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்தது. ஏனெனில் அவ்வருடமே முதன் முதலாக குளோனிங் முறையிலான உயிரினம் உருவாக்கப்பட்டது. இக் குளோனிங் முறையில் டாலி என்ற ஆட்டுக் குட்டியொன்று உருவாக்கப்பட்டு உலகத்தையே திகைப்பில் ஆழ்த்தியிருந்தது. அயன் வில்மட் என்னும் உயிரியல் விஞ்ஞானியே டாலி என்ற ஆட்டுக் குட்டியை உருவாக்கி செயற்கை உயிரியலுக்கு வலுச் சேர்த்தார்.

டாலியின் உருவாக்கத்திற்கு ஆதாரமாக 3 பெண் செம்மறியாடுகள் இருந்துள்ளன. இனப் பெருக்கச் செயற்பாட்டிற்கு ஆண் செம்மறியாட்டின் பங்கோ அல்லது எந்த ஆண் செம்மறியாட்டின் உயிரணுக் கலப்போ இல்லாமல் டாலி  பிறந்தமையால் இதுவொரு அறிவியலில் வியக்கத்தக்க செய்தியாகும்.

ஒரு ஆட்டுக் குட்டியில் ஆரம்பித்த இக் குளோனிங் முறை இன்று குழந்தைகளையும் உருவாக்கலாம் என அடித்துச் சத்தியம் செய்கின்றது. ஆரம்பத்தில் விலங்குகளில் குளோனிங் முறையை பயன்படுத்தி பல விலங்குகள் உருவாக்கப்பட்டமையை அடுத்து தற்போது இதனை உலகந õடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.

குளோனிங் முறையிலே ஆட்டுக் குட்டிகளை தவிர ஓட்டகம், நரி , எலி , பன்றி போன்றவையும் உருவாக்கப்பட்டுள்ளன. மனிதனிலிருந்து குளோனிங் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளை பிரான்ஸ் பெண் மருத்துவ விஞ்ஞானியொருவர் கண்டு பிடித்த பின் பல  நாடுகள் மனித இனத்தில் குளோனிங் முறை கூடாது என தடை செய்யப்பட்டது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலைத்தேய நாடுகள் குளோனிங் முறையிலான குழந்தைப் பேறுக்கு தடைவிதித்தன.

இருந்த போதிலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மனிதக் கருவைப் பயன்படுத்தி குளோனிங் செய்துள்ளனர்.  வளர்ந்த பாலூட்டிகளின் மூல உயிரணுக்களை பயன்படுத்திச் செய்யப்பட்ட இந்த குளோனிங் முறை அதிக வெற்றியை தரவில்லை என்றே கூறலாம். இத் தோல்விக்குக் காரணம் வளர் நிலையிலுள்ள உயிரணுக்களின் சிறப்புத் தன்மையே யாகும். உயிரணுக்கள் அனைத்தும் ஒரே மரபணுக் கூறின் அமைப்பினைக் கொண்டுள்ள போதிலும் ஓர் உயிரணு ஒரு உயிரியாக வளர்ச்சியடையும் போது அவை தங்களுடைய உள்ளார்ந்த இயல்புத் தன்மைகளை இழந்து விடுகின்றன. உதாரணமாக தோல் உயிரணு இன்சுலின் உற்பத்தியை செய்வதில்லை. மாறாக மெலனின் எனப்படும் தோலின் நிறத்திற்கு காரணமாக உ ள்ள நிறமிகளுடனே தொடர்பு கொண்டுள்ளன. அதாவது மனித  உடலின் ஒவ்வொரு பாகங்களிலுமுள்ள  உயிரணுக்கள் அப் பாகங்களின் தொழில்களுக்காகவே சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எனவே, முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவரும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் கூறியது போல குளோனிங் முறையிலே உயிரினங்களை உருவாக்காமல் உடலுறுப்புக்களை உருவாக்கலாம். இதன் மூலம் மனித வர்க்கத்திற்கு எதிர்கால நன்மையுள்ளதுடன் உடற்பாகங்கள் வலுவின்றியும் பழுதடைந்தும் ஆரோக்கியமற்ற எத்தனையோ இலட்சக்கணக்கானோரின் வாழ்க்கைக்கு ஒளியேற்ற முடியும்.
எனினும் மனித பல்படியாக்க முறையில் உருவாக்கப்பட்ட ஆண் குழந்தையொன்று பெல்ஜியத்தில் வளர்வதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு இலண்டனில் இருந்து வெளியாகும். சண்டே டைம்ஸ் தெரிவித்திருந்தது. எனினும் இதனை பெல்ஜிய நாட்டு  விஞ்ஞானிகள் மறுத்திருந்தனர்.
 இதேவேளை வில்மட்டின் சோதனைகள் அறிவியலின் விதிமுறைத் தன்மைகளின் கட்டுக்கடங்காத நிலையை எடுத்துரைக்கின்றமையால் குளோனிங் மனித இன அழிவிற்கு காரணமாக அமையும் என இங்கிலாந்தின் அணுக் கரு இயற்பியல் அறிஞரான ஜோசப் ரோட் பிளாக் தெரிவித்தார். அதேபோல் பல எதிர்ப்புகளை குளோனிங் முறை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமய , ஆன்மீக வாதிகளிடம் இருந்தே அதிக எதிர்ப்புகள் எழுந்தன. ஏனெனில் இக் குளோனிங் முறை இயற்கை விதிகளுக்கு மாறனது எனவும் இதன் எதிர் விளைவுகள் எதிர்காலத்தில் மனித வர்க்கத்திற்கோ ஏனைய உயிரினங்களுக்கோ பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
 இதேபோல சில அறிஞர்களும் இதற்கு எதிர்ப்புக் காட்டி வருகின்றனர். அணு குண்டு கண்டுபிடிப்புக்கு ஈடாகவே இப்படியாக்க முறை உள்ளதாக அனைத்து சமூக வர்க்கமும் குறிப்பிடுகின்றது.
இதனால் எதிர்காலத்தில் உ லக அமைதியை விரும்பாத தீய சக்திகளோ அல்லது பயங்கரவாதிகளோ இவ் வறிவியலுடன் மேலும் தொழில் நுட்ப முறைகளை பயன்படுத்தி தீங்கிழைக்க கூடிய மாற்று உயிரினங்களை உருவாக்கலாம். இதனால் எத்தனையோ இடி அமீன்களும்  எத்தனையோ ஹிட்லர்களும் உருவாவார்கள். ஆகவே நினைத்துக் கூட பார்க்க முடியாத பாரிய மாற்றங்களையும் விளøவுகளையும் ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
இக் குளோனிங் முறையில் பிறந்த டாலியின் ஆயுட் காலம் எவ்வளவு என்பதை யாராலும் கூற முடியாத நிலை ஒன்று உ ள்ளது. ஏன் எனில் டாலியை உருவாக்கப் பயன்பட்ட உயிரணுவின் தன்மையாகும். அதாவது செம்மறியாட்டின் பால் மடியில் இருந்து பெறப்பட்ட உயிரணுவைப் போல அவ்வாட்டின் ஏனைய உடற் பாகங்களில் இருந்து எடுக்கப்படும் உயிரணுக்கள் இருக்குமா என்ற வினாவிற்கான விடை தெரியாமையே ஆகும்.  இதேபோல் குளோனிங்கில் உள்ள சில சர்ச்சைகளுக்குத் தீர்வுகள் காணப்படுவதன் மூலம் ஆரோக்கியமான குளோனிங் உயிரினங்கள் உருவாக வழிகோலாக அமையும்.
அதேவேளை கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப் பெரிய உருவத்தை கொண்ட மமூத் என்றும் யானை இனத்தை ஒத்த விலங்கினை குளோனிங் முறையில் உ ருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கான ஆராய்ச்சிகளை ரஷ்யாவின் சக்கா குடியரசின் மமூத் அருட்காட்சியகமும், ஜப்பான் கின்கி பல்கலைக்கழகமும் ஈடுபட்டுவருகின்றன. ஏற்கனவே பாதுகாக்கப்பட்டு வந்த மமூத்தின் தொடை எலும்புப் பகுதியில் இருந்து பெறப்பட்ட கலம் மூலம் குளோனிங் முறையில் உருவாக்கும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது. அந்த முயற்சி எதிர்வரும் 5 ஆண்டுகளில் வெற்றி கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதேபோல் அழியும் விளிம்பிலுள்ள பல உயிரினங்களை இம் முறை மூலம் உருவாக்கி இயற்கை சமனிலை பாதுகாக்க வழி செய்யலாம். எந்தவொரு கண்டுபிடிப்புகள் ஆயினும் செயற்பாடுகளாயினும் நன்மைகளுக்கு சரிசமனான தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
எனவே தீமைகளை மட்டும் எடுத்துக் கூறாது எத்தனையோ ஹிட்லர்கள் என்பதற்கு பதிலாக எத்தனையோ அன்னை தெரேஸாக்கள் , அப்துல் கலாம்கள், ஆபிரகாம் லிங்கன்கள் என உருவாக்கினால் உலகம் அழிவுப் பாதையில் இருந்து ஒரள வேனும் மீளும். அத்துடன் உணவுப் பயிர்களையும் இதுபோல குளோனிங் முறை மூலம் உருவாக்கினால் உலகிலே உணவுத் தட்டுபாடு, வறுமை, பசி என்பன இல்லாது போகும். இவற்றுக்கு எல்லாம் சரியான தீர்வு பெற குளோனிங் முறை ஓர் ஆரோக்கியமான அணுகு முறை என்பதை நிரூபிக்க வேண்டிய தேவை ஆராய்ச்சியாளர்களுக்கு உள்ளது.

இலங்கையை ஆட்டிவிக்கும் சூதாட்டம்

 சா .சுமித்திரை -

உலக நாடுகள் மட்டுமல்லாது, இலங்கையிலும் பெரும் தலையிடியாக மாறி வருகின்ற பிரச்சினைகளில் சூதாட்டம்  முக்கிய இடம்பெற்றுள்ளது. சூதாட்டம் இன்றோ அல்லது நேற்றோ உருவானதொன்றல்ல. மிக மிக புராதன காலங்களிலேயே சூதாட்டங்கள் தொடர்பான பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக வரலாற்று நூல்கள் சான்று பகர்கின்றன.


பணத்தையோ அல்லது பெறுமதியான பொருட்களையோ அல்லது நம்பி வந்த உறவுகளையோ வைத்து ஆடுகின்ற, நிச்சயமற்ற விளைவுகளையும் கொடுக்கக்கூடிய ஒரு வகை விளையாட்டாகவே சூதாட்டம் பார்க்கப்படுகின்றது. பணயமாக வைக்கப்படும் பொருளிலும் கூடிய பெறுமதியை அடைய வேண்டும் என்னும் நோக்கிலேயே  சூதாட்டம் ஆடப்படுகின்றது. அத்துடன் சூதாட்ட விளையாட்டின் முடிவு குறுகிய காலத்திலேயே பெற்றுக்கொள்ள முடிகின்றது. இந்து சமய நூல்கள் மகாபாரதம், நளவெண்பா, போன்றவற்றில் சூதாட்டம் தொடர்பான விழிப்புணர்வுகள் நன்கு வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளன.


மகாபாரதத்திலேயே, துரியோதனனுடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாண்டவர்கள் நாட்டினை இழந்தனர். ஆட்சியை இழந்தனர். மனைவி திரௌபதியை வைத்தும் ஆடினார்கள். இறுதியிலேயே மனைவியைக் கூட காப்பாற்ற முடியாத திறனற்றவர்களாக பாண்டவர்கள் வெளியேறினர். இந்நிலைக்கு சூதாட்டத்தின் மீது இருந்த மதிமயக்கமே காரணமாகும்.


 அதேபோல திருவள்ளுவர் கூட திருக்குறளில் சூதாட்டங்களால் ஏற்படும் பிரதி கூலங்கள் தொடர்பாக சூது  என ஒரு அதிகாரத்தையே எழுதியுள்ளார். எனவே தான் அதன் பின் விளைவுகளை உணர்ந்து பல நாடுகளில் சூதாட்டம் தடை செய்யப்பட்டன. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகள் முற்றாக தடை செய்துள்ளதுடன், சூதாட்டம் ஆடுபவர்களுக்கெதிராக மிகக் கடுமையான சட்டங்களையும் நிறைவேற்றியுள்ளன. எனினும் சில நாடுகளில் அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதித்துள்ளன.


நல்லொழுக்கங்களை போதிக்கின்ற பல அற நூல்களிலே சூதாட்டம் ஒரு தீய பழக்கமாக சொல்லப்படுகின்றது. ஆனால், இன்றைய காலத்திலே எத்தனையோ பழைமையான விடயங்கள் மறைந்து கொண்டு போகின்ற போதிலும் பல காலங்களாக  தொடரும் இச்சூதாட்டம் மட்டும் மறைந்து போகவில்லை. இந்த ஆட்டத்திற்கு புத்துயிர் அளிப்பவர்களாக பணம் படைத்தவர்களே உள்ளனர்.


குதிரைப் பந்தயம், சீட்டாட்டம், அதிஷ்டலாபச் சீட்டு, கோழிச்சண்டை என சூதாட்டத்தில் பல வகைகளை சொல்லிக் கொண்டே போகலாம். இலங்கையிலே  அரச அனுமதியுடனும் அதன் கட்டுப்பாட்டின் கீழும் தான் அதிஷ்ட லாபச் சீட்டு இழுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.


அதேபோல நகரப் பகுதிகளிலே கசினோக்கள் என்னும் சூதாட்ட விடுதிகள் ஆங்காங்கே முளைத்துக் காணப்படுகின்றன. இவை நியோன் விளக்குகளின் கீழ் பகிரங்கமாக சூதாட்டங்கள் ஆடப்படுகின்ற போதிலும் அரசு அது சூதாட்ட விடுதிகளை ஓரளவேனும் கட்டுப்படுத்தியுள்ளன.


கடந்த வாரம் சண்டைச் சேவல்களை மோதவிட்டு பணம் சம்பாதிக்கும் கும்பலொன்றை வென்னப்புவ பொலிஸார் கைது செய்திருந்தனர்.


இதேவேளை மன்னார்தலைமன்னார் பிரதான வீதியிலுள்ள பெரிய கரிசல் கிராமத்தில் கடந்த சில வருடங்களுக்கு மேலாக பல வகையான சூதாட்டங்கள் இடம்பெற்று வருவதாக  ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன. இதனால் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாக பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்கள் பொது அமைப்புகள் மற்றும் பெண்கள் அமைப்புகளுக்கும் முறையிட்டுள்ளனர்.


தங்க நகைகள், வீட்டிலுள்ள பெறுமதியான பொருட்கள், வீட்டு உறுதிகள் என ஒன்றையும் விடாது அனைத்தையும் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இப்பகுதியிலுள்ள பல வறிய குடும்பத்து கணவர்கள் ஒரு நாளைக்கு சூதாட்டத்தின் மூலம் பல இலட்சம் ரூபா திரட்டி விட்டு பெரு மூச்சு விடும் இவர்கள் மறுநாள் அனைத்தையும் தொலைத்து விட்டு வருகின்றனர்.


இதனால் பொறுப்பற்ற இவர்களை  நம்பி வாழும், மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் பல வகையிலே மன உளைச்சல்களுக்கு உள்ளாகின்றனர். இத்தகையோரது பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளை கைவிடுகின்றனர். அத்துடன் வேறு பல சமூகப் பிரச்சினைகளுக்கும் அத்திவாரம் இடப்படுகின்றது.


கடந்த ஜனவரி மாதம் கொழும்பு யூனியன் பிளேஸிலுள்ள மதுபான விடுதியொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 69 பேரை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தனர். இவர்கள் திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே கைது செய்யப்பட்டனர். இச்சுற்றிவளைப்புகள் ஒவ்வொரு நாளும் இடம்பெற்றிருந்தால் எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருப்பார்கள்?


அதேவேளை தங்கொட்டுவ,, தபரவிலப் பகுதியில் சூதாட்டத்துடன் தொடர்புபட்ட 3 பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.


சமூகவிரோத செயல்களை தடுக்க வேண்டிய இத்தகைய அதிகாரிகளே சூதாட்டத்திற்கு துணை போகின்றனர். இது போன்ற சம்பவங்களை வைத்தே கடந்த வருடம் "மங்காத்தா' என்னும் படம் தயாரிக்கப்பட்டிருந்தது. நடிகர் அஜித் பொலிஸாக இருந்து கொண்டு கிரிக்கெட்டில் 500 கோடி ரூபாவை வைத்து சூதாடப்பட்டதை  இவர் மீண்டும் சூதாடி தனதாக்கிக் கொள்வதாக படமாக்கப்பட்டிருந்தது. அதேபோல "ஆடுகளம்' போன்ற பல படங்கள் சூதாட்டங்களை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை சூதாட்டம் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தாது சூதாட்டத்தை தொடர்வது போலவே படமாக்கப்பட்டுள்ளன.


உலகிலேயே பணக்காரர்களின் விளையாட்டாகவே சூதாட்டம் உள்ளது. இவ்வருடம் இடம்பெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சுமார் 5000 கோடி ரூபா சூதாட்டத்திற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
அதேவேளை உலகிலே ஒலிம்பிக் போட்டிகளின் போது ஆண்டொன்றுக்கு 140 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சூதாட்டத்திற்காக புழங்குகின்றன. அதிலும் குறிப்பாக ஆசியாவில் நடைபெறும் சூதாட்டங்கள் ஒலிம்பிக் போட்டிகளின் பெயரையே கெடுக்கின்றன என சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
எனவே தான் இம்முறை ஒலிம்பிக்கில் முதன்முறையாக உலகளவில் நடைபெறும் போட்டிகள் மீது பந்தயங்கள் கட்டப்படுவதைக் கண்காணிக்க ஒரு சிறப்பு புலனாய்வுப் பிரிவிவை உருவாக்கியுள்ளதாக பிரிட்டன் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹ்யூ ராபர்டஸன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உயிரைப் பணயம் வைத்து பல சூதாட்டங்கள் நடைபெறகின்றமை ஒரு அதிர்ச்சிதரக் கூடிய விடயமாகும். அவற்றிலே ஹாக்டக் என்னும் சிக்கன் விளையாட்டு பிரபல்யமான சூதாட்டமாக உள்ளது. அதாவது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திலே ஒரு வெள்ளை நிற கோட்டினை வரைவார்கள். இக்கோடு தான் வெற்றி பெற்ற வரை நிர்ணயிக்கும். தொலைவிலிருந்து எதிர் எதிரே மிக வேகத்தில் காரினை செலுத்துவார்கள். எந்தக் காரின் டயர் வெள்ளைக் கோட்டின் மீது உள்ளதுடன் போட்டியாளர் உயிருடன் உள்ளாரோ அவர் வெற்றி பெற்றவராவார். அவருக்கு பந்தயத்தில் கட்டப்பட்ட பணம் கிடைக்கும். இருவருமே இறந்து விட்டால் கட்டப்பட்ட பணம் அதற்குரிய நிறுவனத்திற்கு சொந்தமாகும். அத்தகயை விளையாட்டுகளில் பணம் கிடைக்கின்றதோ இல்லையோ இந்த ஆட்டங்களை பார்வையிடுவதற்கு பலர் செல்கின்றனர். விபத்து இடம்பெற்ற இடத்தினை நாம் பார்ப்பதற்கே நெஞ்சு பதறும் ஆனால், விபத்து ஏற்படப் போகின்றது என தெரிந்து ஆவலுடன் பார்த்து மகிழ்கின்ற இவர்களின் மன நிலை விசித்திரமானது.
சூதாட்டங்கள் பல வடிவங்களில் இடம்பெறும். இந்த வகையிலே உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை 11.11.11 என்னும் திகதியிலே பிறக்குமென 150 கோடி ரூபாக்கள் பந்தயம் கட்டப்பட்டிருந்தது. இதுபோன்ற அற்பத்தனமான விடயங்களுக்குக் கூட பந்தயம் கட்டப்படுகின்றது. அதேவேளை இணையத்தளங்களின் ஊடாகவும் சூதாட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
சூதாட்டங்களில் ஒன்றான தாயம் போடுதல் என்பது உண்மையிலே தாயம் ஆடுபவர்களின் வாழ்க்கையையே தடுமாறச் செய்கின்றது. எனவே தான் தாயக் கட்டைகளை மனித தலைகளுக்கு ஒப்பாக குறிப்பிடுவார்கள். எனவே தான் மகாபாரதத்தில் வருவது போல தன் மனைவியையும் சூதாட்டத்தில் வைத்து இறுதியில் தோற்றுப் போன சம்பவமொன்று இந்தியாவிலே இடம்பெற்றுள்ளது. மேலைத் தேய நாடுகளில் சூதாட்டங்களால் பெரியளவில் பாதிப்புக்கள் என்று சொல்ல முடியாத போதிலும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பாரிய சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஆட்டம் காண வைக்கின்றது.
பெண்களை விட அதிக ஆண்களே சூதாட்ட விளையாட்டில் அதிகளவு ஈடுபாடு காட்டுகின்றார்கள் என்றோ ஒரு நாள் பெற்ற குருட்டு அதிஷ்டத்தினை கொண்டோ அல்லது என்றோ ஒரு நாள் அதிஷ்டம் பெற்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடனோ தான் ஆடுகின்றனர். சூதாட்டத்தில் தோற்க, தோற்க அறிவாற்றல் செயலிழக்கின்றது. எனவே எதை வைத்து சூதாடுவது என்று தெரிவதில்லை. தனக்கு சொந்தமானது மற்றவர்களுக்கு சொந்தமானது என எல்லாவற்றையும் வைத்து விளையாடி இறுதியிலே தன் தலையினையும் வைத்து சூதாட ஆரம்பித்து விடுகின்றனர்.
அதிக சூதாட்டம் ஆடுபவர்களது கண் நரம்புகளில் சில இராசயனப் பொருட்களின் குறைபாடு காரணமாகவே இந்நிலை தூண்டப்படுகின்றது. ஆகவே இக்குறைபாடு காரணமாக அவர்களுக்கு இந்நிலை அதிக சந்தோஷத்தைக் கொடுக்கின்றது என ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இலங்கையிலே அரச அனுமதியின்றி ஆடப்படும் சூதாட்டங்களுக்கு அபராத தொகையும் 5 வருட சிறைத் தண்டனையும் வழங்க சட்டத்தில் இடமுண்டு. எனினும் இதுவரை  காலங்களிலே அவை எந்த வகையிலே அதிகரிக்கும் சூதாட்டங்களை கட்டுப்படுத்தியதோ தெரியவில்லை. எனவே அரசு பாரிய விளைவைத் தராத சூதாட்டங்களை தனது கட்டுப்பாட்டிலே வைத்துக் கொண்டு ஏனைய வகை சூதாட்டங்களைத் தடை செய்ய வேண்டும். இந்நடவடிக்கைக்கு பொது சமூக அமைப்புகளும் உதவ முன்வர வேண்டும். இல்லையெனில் இலங்கையர்கள் பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.