சனி, 30 ஜூன், 2012

செயற்கை உயிரியல் எதிர்ப்புகளும் எதிர்பார்ப்புகளும்






சா.சுமித்திரை

 படைப்பு இறைவனின் அருள் என்ற நிலை மாறி மனிதனாலும் உயிர்களை உருவாக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டமையே அறிவியலின் உச்சம் எனலாம்.

 கோயில்களையும் வேப்பமரங்களையும் சுற்றி வந்த பெண்களை மருத்துவமனையின் ஆய்வுக் கூடங்களை நோக்கி இழுத்து வந்தது அறிவியலின் இந்த மகத்தான கண்டுபிடிப்பு !

உலகிலே கருத்தரிப்பு முறைகளிலே கடந்த 60 வருடங்களுக்கு மேலாக பல்வேறு சோதனைகள் மூலம் மாற்றங்களும் முன்னேற்றங்களும் இடம்பெற்று இயற்கைப் படைப்புக்களை குளோனிங் (பல் படியாக்கம்) முறையிலே உருவாக்கும் நிலை பற்றி சிந்திக்கும் அளவுக்கு அறிவியல் தொழில் நுட்பம் முன்னேறியுள்ளது.

அதாவது சோதனைக் குழாய் மூலமும், வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெறலாம் என்பதை நிரூபித்துக் காட்டியதுடன் அவை இன்றைய காலத்திலே சாதாரணதொரு மருத்துவத்துறையாகவும் சாதாரண மக்கள் பின்பற்றும் வழிமுறையாகவும் காணப்படுகின்றது. தொடர்ந்து அனைத்து இன உயிரினங்களையும் பல் படியாக்கம் (இடூணிணடிணஞ்)  முறையிலே உருவாக்கலாம் என்பதை உறுதிறபட செய்து காட்டியுள்ளமை அறிவியல் மருத்துவத் துறைக்கு ஒரு மைல்  கல்லாகும்.

மிக அண்மையில் பஷ்மினா இனத்தைச் சேர்ந்த வெள்ளாடொன்றினை குளோனிங் முறைகளைப் பின்பற்றி அதன் நகலாக ஒரு ஆட்டுக் குட்டி ஒன்றினை இந்தியாவின் காஷ்மீர் வேளாண்மை விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ரிபாய் அகமது ஷா தலைமையிலான குழுவினர் உருவாக்கியிருந்தனர். இந்த வெள்ளாட்டுக் குட்டிக்கு நூரி என்று பெயரிடப்பட்டுள்ளதுடன் 1.3 கிலோ எடையுடன் இது ஆரோக்கியமாக உள்ளதுடன் குளோனிங் முறையிலே முதன் முதலாக உருவாக்கப்பட்ட வெள்ளாடு இதுவேயாகும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

21 ஆம் நூற்றாண்டின் உயிரியலின் சாதனையாகவுள்ள பல் படியாக்க முறை மூலம் பறவைகள், விலங்குகள் , தாவரங்கள் மட்டுமன்றி மனிதர்களைக் கூட உருவாக்க முடியும். பல் படியாக்கம் செய்யப்படும் உயிரங்கியின் உடலியல் வேறுபாடோ அல்லது அவற்றின் குணயில்யபு வேறுபாடுகளோ எதுவுமின்றி அவ் வங்கியை ஒத்த இன்னொரு அங்கியை உருவாக்குவது குளோனிங்காகும்.

அதாவது ஆணின் உயிரணு மூலமாக உருவாக்கப்படும் உயிர் அந்த ஆணின் பிரதியாகவும் ஒரு பெண்ணின் உயிரணு மூலமாக உருவாக்கப்படும் உயிர் அப் பெண்ணில் நகலாகவும் காணப்படும்.

ஒரு ஆணும் பெண்ணும் இணையாமல் ஒரு ஆணின் உயிரணுவையோ அல்லது பெண்ணின் உயிரணுவையோ கொண்டு உருவாக்கும் உயிரே குளோனிங் முறையில் உருவான உயிரினமாக கருதப்படும்.

1996 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிவியல் வரலாற்றிலே ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்தது. ஏனெனில் அவ்வருடமே முதன் முதலாக குளோனிங் முறையிலான உயிரினம் உருவாக்கப்பட்டது. இக் குளோனிங் முறையில் டாலி என்ற ஆட்டுக் குட்டியொன்று உருவாக்கப்பட்டு உலகத்தையே திகைப்பில் ஆழ்த்தியிருந்தது. அயன் வில்மட் என்னும் உயிரியல் விஞ்ஞானியே டாலி என்ற ஆட்டுக் குட்டியை உருவாக்கி செயற்கை உயிரியலுக்கு வலுச் சேர்த்தார்.

டாலியின் உருவாக்கத்திற்கு ஆதாரமாக 3 பெண் செம்மறியாடுகள் இருந்துள்ளன. இனப் பெருக்கச் செயற்பாட்டிற்கு ஆண் செம்மறியாட்டின் பங்கோ அல்லது எந்த ஆண் செம்மறியாட்டின் உயிரணுக் கலப்போ இல்லாமல் டாலி  பிறந்தமையால் இதுவொரு அறிவியலில் வியக்கத்தக்க செய்தியாகும்.

ஒரு ஆட்டுக் குட்டியில் ஆரம்பித்த இக் குளோனிங் முறை இன்று குழந்தைகளையும் உருவாக்கலாம் என அடித்துச் சத்தியம் செய்கின்றது. ஆரம்பத்தில் விலங்குகளில் குளோனிங் முறையை பயன்படுத்தி பல விலங்குகள் உருவாக்கப்பட்டமையை அடுத்து தற்போது இதனை உலகந õடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.

குளோனிங் முறையிலே ஆட்டுக் குட்டிகளை தவிர ஓட்டகம், நரி , எலி , பன்றி போன்றவையும் உருவாக்கப்பட்டுள்ளன. மனிதனிலிருந்து குளோனிங் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளை பிரான்ஸ் பெண் மருத்துவ விஞ்ஞானியொருவர் கண்டு பிடித்த பின் பல  நாடுகள் மனித இனத்தில் குளோனிங் முறை கூடாது என தடை செய்யப்பட்டது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலைத்தேய நாடுகள் குளோனிங் முறையிலான குழந்தைப் பேறுக்கு தடைவிதித்தன.

இருந்த போதிலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மனிதக் கருவைப் பயன்படுத்தி குளோனிங் செய்துள்ளனர்.  வளர்ந்த பாலூட்டிகளின் மூல உயிரணுக்களை பயன்படுத்திச் செய்யப்பட்ட இந்த குளோனிங் முறை அதிக வெற்றியை தரவில்லை என்றே கூறலாம். இத் தோல்விக்குக் காரணம் வளர் நிலையிலுள்ள உயிரணுக்களின் சிறப்புத் தன்மையே யாகும். உயிரணுக்கள் அனைத்தும் ஒரே மரபணுக் கூறின் அமைப்பினைக் கொண்டுள்ள போதிலும் ஓர் உயிரணு ஒரு உயிரியாக வளர்ச்சியடையும் போது அவை தங்களுடைய உள்ளார்ந்த இயல்புத் தன்மைகளை இழந்து விடுகின்றன. உதாரணமாக தோல் உயிரணு இன்சுலின் உற்பத்தியை செய்வதில்லை. மாறாக மெலனின் எனப்படும் தோலின் நிறத்திற்கு காரணமாக உ ள்ள நிறமிகளுடனே தொடர்பு கொண்டுள்ளன. அதாவது மனித  உடலின் ஒவ்வொரு பாகங்களிலுமுள்ள  உயிரணுக்கள் அப் பாகங்களின் தொழில்களுக்காகவே சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எனவே, முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவரும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் கூறியது போல குளோனிங் முறையிலே உயிரினங்களை உருவாக்காமல் உடலுறுப்புக்களை உருவாக்கலாம். இதன் மூலம் மனித வர்க்கத்திற்கு எதிர்கால நன்மையுள்ளதுடன் உடற்பாகங்கள் வலுவின்றியும் பழுதடைந்தும் ஆரோக்கியமற்ற எத்தனையோ இலட்சக்கணக்கானோரின் வாழ்க்கைக்கு ஒளியேற்ற முடியும்.
எனினும் மனித பல்படியாக்க முறையில் உருவாக்கப்பட்ட ஆண் குழந்தையொன்று பெல்ஜியத்தில் வளர்வதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு இலண்டனில் இருந்து வெளியாகும். சண்டே டைம்ஸ் தெரிவித்திருந்தது. எனினும் இதனை பெல்ஜிய நாட்டு  விஞ்ஞானிகள் மறுத்திருந்தனர்.
 இதேவேளை வில்மட்டின் சோதனைகள் அறிவியலின் விதிமுறைத் தன்மைகளின் கட்டுக்கடங்காத நிலையை எடுத்துரைக்கின்றமையால் குளோனிங் மனித இன அழிவிற்கு காரணமாக அமையும் என இங்கிலாந்தின் அணுக் கரு இயற்பியல் அறிஞரான ஜோசப் ரோட் பிளாக் தெரிவித்தார். அதேபோல் பல எதிர்ப்புகளை குளோனிங் முறை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமய , ஆன்மீக வாதிகளிடம் இருந்தே அதிக எதிர்ப்புகள் எழுந்தன. ஏனெனில் இக் குளோனிங் முறை இயற்கை விதிகளுக்கு மாறனது எனவும் இதன் எதிர் விளைவுகள் எதிர்காலத்தில் மனித வர்க்கத்திற்கோ ஏனைய உயிரினங்களுக்கோ பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
 இதேபோல சில அறிஞர்களும் இதற்கு எதிர்ப்புக் காட்டி வருகின்றனர். அணு குண்டு கண்டுபிடிப்புக்கு ஈடாகவே இப்படியாக்க முறை உள்ளதாக அனைத்து சமூக வர்க்கமும் குறிப்பிடுகின்றது.
இதனால் எதிர்காலத்தில் உ லக அமைதியை விரும்பாத தீய சக்திகளோ அல்லது பயங்கரவாதிகளோ இவ் வறிவியலுடன் மேலும் தொழில் நுட்ப முறைகளை பயன்படுத்தி தீங்கிழைக்க கூடிய மாற்று உயிரினங்களை உருவாக்கலாம். இதனால் எத்தனையோ இடி அமீன்களும்  எத்தனையோ ஹிட்லர்களும் உருவாவார்கள். ஆகவே நினைத்துக் கூட பார்க்க முடியாத பாரிய மாற்றங்களையும் விளøவுகளையும் ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
இக் குளோனிங் முறையில் பிறந்த டாலியின் ஆயுட் காலம் எவ்வளவு என்பதை யாராலும் கூற முடியாத நிலை ஒன்று உ ள்ளது. ஏன் எனில் டாலியை உருவாக்கப் பயன்பட்ட உயிரணுவின் தன்மையாகும். அதாவது செம்மறியாட்டின் பால் மடியில் இருந்து பெறப்பட்ட உயிரணுவைப் போல அவ்வாட்டின் ஏனைய உடற் பாகங்களில் இருந்து எடுக்கப்படும் உயிரணுக்கள் இருக்குமா என்ற வினாவிற்கான விடை தெரியாமையே ஆகும்.  இதேபோல் குளோனிங்கில் உள்ள சில சர்ச்சைகளுக்குத் தீர்வுகள் காணப்படுவதன் மூலம் ஆரோக்கியமான குளோனிங் உயிரினங்கள் உருவாக வழிகோலாக அமையும்.
அதேவேளை கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப் பெரிய உருவத்தை கொண்ட மமூத் என்றும் யானை இனத்தை ஒத்த விலங்கினை குளோனிங் முறையில் உ ருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கான ஆராய்ச்சிகளை ரஷ்யாவின் சக்கா குடியரசின் மமூத் அருட்காட்சியகமும், ஜப்பான் கின்கி பல்கலைக்கழகமும் ஈடுபட்டுவருகின்றன. ஏற்கனவே பாதுகாக்கப்பட்டு வந்த மமூத்தின் தொடை எலும்புப் பகுதியில் இருந்து பெறப்பட்ட கலம் மூலம் குளோனிங் முறையில் உருவாக்கும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது. அந்த முயற்சி எதிர்வரும் 5 ஆண்டுகளில் வெற்றி கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதேபோல் அழியும் விளிம்பிலுள்ள பல உயிரினங்களை இம் முறை மூலம் உருவாக்கி இயற்கை சமனிலை பாதுகாக்க வழி செய்யலாம். எந்தவொரு கண்டுபிடிப்புகள் ஆயினும் செயற்பாடுகளாயினும் நன்மைகளுக்கு சரிசமனான தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
எனவே தீமைகளை மட்டும் எடுத்துக் கூறாது எத்தனையோ ஹிட்லர்கள் என்பதற்கு பதிலாக எத்தனையோ அன்னை தெரேஸாக்கள் , அப்துல் கலாம்கள், ஆபிரகாம் லிங்கன்கள் என உருவாக்கினால் உலகம் அழிவுப் பாதையில் இருந்து ஒரள வேனும் மீளும். அத்துடன் உணவுப் பயிர்களையும் இதுபோல குளோனிங் முறை மூலம் உருவாக்கினால் உலகிலே உணவுத் தட்டுபாடு, வறுமை, பசி என்பன இல்லாது போகும். இவற்றுக்கு எல்லாம் சரியான தீர்வு பெற குளோனிங் முறை ஓர் ஆரோக்கியமான அணுகு முறை என்பதை நிரூபிக்க வேண்டிய தேவை ஆராய்ச்சியாளர்களுக்கு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக