புதன், 27 பிப்ரவரி, 2013

இயற்கையை ஈடு செய்யுமா செயற்கை முறை?



சா.சுமித்திரை

இயற்கைக்கு பயந்து அதோடு ஒன்றி வாழ்ந்த மனிதன் படிப்படியாக அவற்றைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் அபரிமித பயனைப் பெற்றுக்கொள்ளத் தொடங்கினான். அதன் விளைவாக  இன்று இயற்கை அனர்த்தங்கள், உயிர் அழிவுகள், வளப்பற்றாக்குறை, உயிரினம் நிலவுகையில் சந்தேகம் எனப் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

ஆயினும் தனது நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள வளப் பற்றாக்குறை, புதுவகையான நோய்கள், காலநிலை மாற்றம், புவியியல் தோற்றம் ஏற்றத்தாழ்வுகள் என்பவற்றுக்கு தீர்வாக பல பதிலீடுகளையும் தற்காலிக தடுப்புப் பாதுகாப்புத் திட்டங்களையும் உருவாக்கி வெற்றி கண்டுள்ளான் மனிதன்.




அந்த வகையிலே செயற்கை மழை, செயற்கை உடல் அவயவங்கள், செயற்கை உயிரினங்கள், செயற்கை கருக்கட்டல்,  செயற்கை இறைச்சிகளும், மீன்களும், செயற்கைக் குருதி என ஒவ்வொரு பற்றாக்குறையாகவுள்ள தேவைகளுக்கும் பதிலீடுகளை அமைத்துக்கொண்டு வருகின்றான்.

வரட்சிக் காலம் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான நீர் பற்றாக்குறையைத் தீர்த்துக்கொள்ள செயற்கை மழைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இம்முறை மூலம் மழை பெற்று வருவதில் சீனா முன்னிலை வகிக்கின்றது. இதனை இலங்கையிலும் நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்றுள்ளன.
ஏனெனில், செயற்கை மழை என்பது செயற்கையாக மேகத்தை உருவாக்கி, மழை பெய்யச் செய்வதல்ல. வளிமண்டலத்திலிருக்கின்ற மேகங்கள், நாம் மழை பெய்ய வேண்டுமென நினைக்கும் இடத்திற்கு நேர் மேலே வரும் போது இரசாயனப் பொருட்கள் தூவி அவற்றினை மழை மேகங்களாக்கி மழை பெய்யச் செய்வதாகும்.

உயிரின நிலவுகை பற்றாக்குறை, சனத்தொகை பெருக்கம் என்பவற்றால் ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யவும் உயிரினங்கள் வதை செய்து கொல்வதைத் தடை செய்யும் செயற்கையாக இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

கால்நடைகளின் தசைகளிலிருந்து மூலவுயிர் கலங்கள் பிரித்தெடுக்கப்பட்டு அவை ஆய்வுக் கூடங்களில் தசையிழையப்பட்டைகளாக உருவாக்கப்படுகின்றன. பின் அவற்றினை செயற்கைக் கொழுப்புக் கலங்களுடன் சேர்த்து இறைச்சியாக மாஸ்டிரிக்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

நிஜமான இறைச்சியைப் போல, இளஞ்சிவப்பு நிறம் கொடுக்கவும், சமைக்க, சாப்பிடுவதற்கு ஏற்ற வகையிலே, இறைச்சி போன்ற சுவையை வழங்குவதும் இந்த ஆராய்ச்சியாளருக்கு பாரிய சவாலாக அமைந்திருக்கும்.
அதேபோல, மரபணு மாற்றப்பட்ட செயற்கை மீன் தயாரிக்கும் திட்டமொன்று விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது.

விபத்துகளிலோ, அல்லது வேறு காரணங்களினாலோ கை, கால் போன்ற உடல் அவயவங்களை இழந்தோருக்கு வரப்பிரசாதமாக செயற்கை அவயவங்கள் உள்ளன. முன்பு அங்கவீனப்படுபவர்களை மரத்தாலான போலிக் கைகளுடனோ அல்லது காலுடனோ பார்த்திருப்போம். ஆனால், தற்பொழுது உண்மையான கை, கால்களை போல நெகிழ்வான உயிர்ப்பான உணர்வுள்ள உடல் அவயவங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
விவசாய உற்பத்தியை பெருக்கும் நோக்கிலே, செயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நைதரசன், பொட்டாசியம், பொஸ்பரஸ் போன்ற மூலப் பொருட்களாலான இவை சக்தியிழக்கும் மண்ணுக்கு தற்காலிகமாக வளமூட்டுகின்றன.

நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உணவுப் பொருள் உற்பத்திக்கு, நுண்ணுயிர்கொல்லிக்கு எனப் பல காரணங்களுக்காக செயற்கை உயிரிகள் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக டெங்கு நுளம்பின் வீரியத்தைக் குறைக்க அதனை விட வீரியம் கூடிய நுண்ணுயிரியை விசுறுதலாகும்.
விஞ்ஞான அறிவியலின் வளர்ச்சியால், இழப்புகளும் பற்றாக்குறைகளும் ஓரளவு ஈடுகட்டப்படுகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது.

ஆயினும், இவற்றினால் இயற்கைக்கேற்ப ஈடு செய்ய முடியாது. இந்த இழப்பீடுகளை மீளப்பெறவென அதிக பணம் செலவளித்தும் மீண்டும் மீண்டும் சுற்றுச் சூழலுக்கு நாம் பாதிப்பையே ஏற்படுத்தி வருகின்றோம் என்பதே உண்மை. மனிதன்  எவ்வளவு தான் அறிவியல் விஞ்ஞானத்துடன் ஒன்றி மேல் பறந்தாலும் அவை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இருந்தால் மட்டுமே அறிவியல் நிலைத்திருக்கும்

வியாழன், 21 பிப்ரவரி, 2013

நுகர்வோரை மிரட்டும் பாவனைக்குதவாத பொருட்கள்



 சா.சுமித்திரை

இலங்கை நுகர்வோர் சந்தைகளையே ஆட்டங்காண  வைக்கும் வகையில் காலாவதியான பழுதடைந்த அல்லது தரமில்லாத பெருந்தொகையான  உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்படுவதும் பின்னர் அவை அழிக்கப்படுவதும்  அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.

பொருட்களின் விலை அதிகரிப்பு, கறுப்பு சந்தைகளில் இலாபம் உழைப்பு, இறக்குமதி வரி தீர்வைகள் அதிகரிப்பு, சந்தைகளில் பொருட்களின் விலைகளில் காணப்படும் தளம்பல் நிலை, பொருள் உற்பத்திகளிலுள்ள ஏற்றத்தாழ்வுகள் மற்றும் இது சம்பந்தப்பட்ட சில அதிகாரம் மிக்க ஊழியர்களது முறையில்லாத நடவடிக்கைகள் என பலதரப்பட்ட காரணங்களால் உள்நாட்டு சந்தைகளில் பாவனைக்குதவாத தரமில்லாத காலாவதியான  உணவுப் பொருட்கள் நிறையவே உள்ளன.

இந்நிலைமை மேலும் அதிகரிக்குமானால் நுகர்வோர்  சந்தைகளின் ஆரோக்கிய நிலைமைகளுக்கு  கேடு விளைவிப்பதாகவும் வர்த்தக வியாபார நடவடிக்கைகளை பாரியளவில் வீழ்ச்சியடையச் செய்து பொருளாதார நெருக்கடிகளை தோற்றுவிப்பதாகவும் அமையுமென பொருளாதார  நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

 கடந்த வாரம் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 தொன் நிறையுடைய உருளைக்கிழங்குகள் பாவனைக்குதவாத நிலையில் பேலியகொட  நுகே வீதியில் வைத்து பேலியகொட பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவை கொழும்பு பெரிய சந்தைக்குக்  கொண்டு செல்வதற்கென  முச்சக்கரவண்டிகளில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்த நிலையிலேயே பொலிஸார்  கண்டுபிடித்து கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டது.

தலைநகரிலுள்ள பிரதான சந்தைக்கே இவ்வளவு தொகையான பாவனைக்குதவாத உருளைக்கிழங்குகளை விற்பனை செய்யவென கொண்டு செல்லவிருந்த சம்பவமானது  நாட்டிலுள்ள நகர்ப்புறச் சந்தைகளிலுள்ள உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் அச்சமடைய வேண்டிய  நிலையை ஏற்படுத்தியுள்ளதென்றே சொல்லவேண்டும்.

 வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் அநேகமானவை உள்நாட்டு வர்த்தக சந்தைகளுக்கு  ஏன் பழுதடைந்த நிலையிலே, செல்கின்றன என்ற கேள்விக்கு வர்த்தகர்களாலும் அதிகாரிகளாலும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஆயினும் குறிப்பாக வியாபார நடவடிக்கைகளின் முகாமைத்துவம் சரியில்லாமை, அவை  தொடர்பான சட்டதிட்டங்கள் முறையாக அமுலில் இல்லாமை, இறக்குமதியாளரின் அலட்சிய போக்கு மற்றும்  இறக்குமதி தீர்வைகளுமே இந்நிலைக்குப் பிரதான காரணங்களாகவுள்ளன.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை இலகுவில் பழுதடையக்கூடியவை. இவற்றினை இறக்குமதியாளர்கள் கப்பல்கள் மூலம் இலங்கைத்துறை முகத்திற்கு கொண்டுவரும் போது நீண்ட காலம் எடுக்கின்றது. அத்துடன் அவை பாதுகாப்பான முறைகளிலே பொதி செய்யப்பட்டு அனுப்பட்டிருக்கும் என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

 அதேபோல, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் சில சமயங்களில் காலம் தாழ்த்தி வருகையில் அவை கொள்வனவு செய்யப்பட்ட விலையைவிட உள்நாட்டு சந்தைகளிலேயே விலை குறைவாக இருக்கும். அத்துடன், அவற்றினை விற்றுக் கிடைக்கும் இலாபத்தை விட இறக்குமதி வரிகள்  அதிகமாக காணப்படும். இதுபோன்ற காரணங்கள் பொருட்களை இறக்குமதி செய்த பின்பு சிலர் அவற்றினை துறைமுகத்திற்கு சென்று பெற்றுக்கொள்வதில்லை.

 இதன் விளைவாக குறிப்பிட்ட கால எல்லைகளின் பின்னர் அவை துறைமுக அதிகார சபையினால் ஏலத்தில் விற்கப்படுகின்றன. இதனைக் குறைந்த விலைகளிலே கொள்வனவு செய்து வியாபாரிகள் சிறிது இலாபம் வைத்து விற்பனை செய்கின்றனர்.

இதேபோல வெளிநாடுகளிலிருந்து குறிப்பிட்ட உணவுப் பொருட்களை கட்டளைகள் மூலம் இறக்குமதி செய்ய இணையங்களையோ தொலைபேசி இணைப்புகளையோ அல்லது முகவர்களையோ நாடுகின்றனர். ஆனால், இறக்குமதியாகும்  எல்லாப் பொருட்களும் தரமானவை என்பதை இறக்குமதியாளர்களோ அல்லது ஏற்றுமதியாளர்களோ  உறுதிப்படுத்த  முடியாது. இது போன்ற காரணங்களாலேயே இறக்குமதி செய்யப்பட்டு உள்நாட்டு சந்தைகளுக்கு வரும் சில பொருட்கள் தரமில்லாமலும்  பாவனைக்குதவாத நிலையிலும்  காலாவதியான நிலையிலும் உள்ளன.

 கடந்த 5 ஆம் திகதியன்று கண்டி நகரிலிருந்து  5 இலட்சம் ரூபா பெறுமதியான தோடம்பழங்கள் பாவனைக்குதவாத நிலையிலே சுகாதார பரிசோதனை அதிகாரிகளால் மீட்கப்பட்டிருந்தன. இவற்றைப் பழப்பாகு, பழச்சாறு தயாரிக்கும் உற்பத்தியாளர்  குறைந்த விலையில் வாங்கிச் சென்று பயன்படுத்துவதாகவும் சுகாதார பரிசோதனை அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதேவேளை, ஒரு குறிப்பிட்ட காலப் பகுதிகளில் மட்டும்  சில உணவுப் பொருட்கள் சந்தைக்கு வருகின்றன. அக்காலப்பகுதிகளில் பொருட்களின் நிரம்பல் அதிகமாகவுள்ளமையால் அவைகளின் விலைகளும் குறைவாகவே இருக்கும். ஆனால் ஏனைய காலப்பகுதிகளில் அவற்றின் விலை உயர்வாக இருக்கும். எனவே சில வர்த்தகர்கள் மலிவான காலப்பகுதிகளில் அப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டு பின்னர் அதிக விலைக்கு விற்கின்றனர். இந்நிலையிலும் பொருட்களின் தரம் மாற்றமடைகின்றது.

இதேவேளை. பொருட்களின் விலை அதிகரிக்குமென ஏதேனும் எதிர்வு கூறப்பட்டால் குறிப்பாக மொத்த  வியாபாரிகள்  மூடை மூடையாக பதுக்கி விடுகின்றனர். ஆனால் அவை சில வேளைகளில் அந்த விலையேற்றம்  2 அல்லது 3 மாதங்களின் பின்னர் நடைமுறைப்படுத்தப்படுமானால் அவை உற்பத்திக் காலத்தை விட மேலும் 5,6 மாதங்கள் கடந்து விடும். இதன் விளைவாக பொருட்களின் பாவனைக்காலமோ அல்லது தரமோ மாறிவிடுகின்றன. இதனால் பிறகு அப்பொருட்களை மலிவு விலையில்  வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படுகின்றன.

 இதுபோன்ற  எத்தனையோ சம்பவங்கள் வியாபாரிகளின் சுயநல போக்கினால் மட்டுமே நடைபெறுகின்றன. அவர்களது நோக்கம் இலாபம் உழைப்பதில் மட்டுமே காணப்படுகின்றது என்பதை எவராலும்  மறுக்க முடியாது.

 கடந்த மாதம் சீமெந்து கலந்த அரிசி, பருப்பு போன்றவை ஒரு தொகையாக கொழும்பு புறக்கோட்டைப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டிந்தன. அதேபோல பாவனைக்குதவாத எண்ணெய் கொள்கலன்கள், மாசி கருவாடு,சீனி ,மா, தேயிலை என பல உணவுப் பொருட்கள் நாட்டின் பல பகுதிகளிலும் தினமும்  கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. தரமில்லாத இதுபோன்ற உணவுப் பொருட்களால் வர்த்தகர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையே ஆரோக்கிய மற்றதொரு  நிலையே  உருவாகும்.

அநேகமாக மொத்த வியாபார நிலையங்களின் களஞ்சிய சாலைகளிலிருந்தே பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றன. கடந்த வருடம்  மட்டும் நுகர்வோர் அதிகார சபையினால் 27877 திடீர் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், பாவனைக்குதவாத பழுதடைந்த தரமில்லாத உணவுப் பொருட்கள் தொடர்பான முறைகேடுகளுக்கு 91 மில்லியன் ரூபா தண்டப் பணமாக அறவிடப்பட்டுள்ளது.

இந்நிலையிலே இவ்வருட முதல் மாதத்தில் பழுதான நிலையில் இறைச்சி வகைகள், பழங்கள், அரிசி, பருப்பு, மாசி, கருவாடு என நுகர்வோர் அதிகாரசபை  அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமையை அறிந்து நுகர்வோர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதுடன், சுகாதார கேடுகளுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.
 இதேபோல், சில அதிகாரிகளது முறையற்ற செயல்களாலும் அவர்களது அலட்சிய போக்காலும் பாவனைக்குதவாத பொருட்கள் நுகர்வோர் கைகளில் தவழும் சம்பவங்களையும்  கட்டாயம் சொல்லியாக வேண்டும்.
 இயற்கை அனர்த்தங்கள் மற்றும் சில காரணங்களாலும் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூட பாவனைக்குதவாத உலருணவுப் பொருட்கள்  நிவாரண உதவிகளாக வழங்கப்பட்டு வருகின்றமை வேதனை தரக்கூடிய விடயமாகும்.கடந்த 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பகுதியில்  மீளக்குடியேறிய நாவலடி, பூம்புகார் மற்றும் அரியாலை  கிழக்குப் பகுதி மக்களுக்கு .நா.வின் முகவர் அமைப்பான யுனிசெப் மற்றும் யு.என்.எச்.சி.ஆர். நிறுவனங்கள் உலருணவுப் பொருட்களையும் அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கியிருந்தன.

 இப்பகுதியிலுள்ள 80 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட சவர்க்காரம், சலவைத்தூள், பற்பசை, ஷம்போ மற்றும் உலருணவுப் பொருட்கள் பாவனைக்குதவாதவையாக காணப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.

 அதேபோல், அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வழங்கப்பட்ட வெள்ள நிவாரண உலருணவுப் பொருட்கள் பாதிக்கப்பட்டோருக்கு வழங்காது பதுக்கிவைக்கப்பட்டிருந்த குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதன்படி 140 மூடை அரிசி, 70 மூடை பருப்பு, 1200  ரின்மீன்கள் 40 மூடை சீனி என்பன மன்னார் பல நோக்குக்கூட்டுறவுச் சங்கக் களஞ்சியத்திலிருந்து  பழுதடைந்த நிலையில் மீட்கப்பட்டன. இதனையடுத்து களஞ்சியசாலை சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டதாகக் கூறி அது சீல் வைத்து மூடப்பட்டது. இந்நிலையில் பாவனைக்குதவாத உருளைக்கிழங்கு ,வெங்காயம், கருவாடு என்பன இரண்டு உழவு இயந்திரங்களில் ஏற்றப்பட்டுச் செல்லப்பட்டு வீசப்பட்ட சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளது.

 பாவனைக்குதவாத தரமில்லாத பொருட்களிலிருந்து பாவனையாளர்களை முழுமையாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் நியாயமற்ற வர்த்தக செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்ட பாவனையாளருக்கு  நிவாரணங்களை வழங்குதல் வேண்டும். அதேவேளை, பாவனையாளர்களுக்கு ஒவ்வொரு உற்பத்திப் பொருட்கள், தொடர்பான அறிவூட்டல்களையும் வலுவூட்டல்களையும் வழங்குதல் மற்றும் நியாயமற்ற போட்டி வர்த்தக செயற்பாடுகளிலிருந்து வியாபாரிகள். உற்பத்தியாளர்களைப் பாதுகாத்து ஆரோக்கியமான போட்டிகளை ஏற்படுத்துவதன் மூலம் சுகாதாரமான உணவுப் பொருட்கள் ஓரளவேனும்  சந்தைகளுக்கு வரும். அத்துடன் நுகர்வோர் அதிகாரசபை பொருளாதாரங்களில்  நிலவுகின்ற போட்டித்தன்மை சந்தை நிலவரங்கள்  தொடர்பிலே அடிக்கடி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

 இதேபோல, ஒவ்வொரு வர்த்தகர்களுக்கும் நுகர்வோருக்குமிடையே நம்பிக்கையான  உறவினை வலுப்படுத்திக்  கொள்ள வேண்டும். இதுபோன்ற சில நடவடிக்கைகள் மூலம் உள்நாட்டு சந்தைககளுக்கு வரும் பழுதடைந்த தரமில்லாத பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை படிப்படியாக இல்லாது செய்யமுடியும் .

ரோபோ நோயாளி



 மருத்துவ மாணவர்களுடைய செயன்முறைப் பயிற்சிகளில் எதிர்காலத்தில் உபயோகிக்கக் கூடிய வகையிலே இதயத் துடிப்பு , கண் அசைவுகள் மற்றும் உண்மையான இரத்த காயங்கள் உடைய ஆச்சரியமான ரோபோ நோயாளர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளனர்.

வீரியம் கூடிய எபேலா வைரஸ், நுரையீரல் புற்றுநோய் , பக்க வாதம் விபத்துகள் மற்றும்  வன்முறைச் சம்பவங்களில் ஏற்படும் காயங்கள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களைப் போன்ற தோற்றப்பாடுகளைக் கொண்டவையாக இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த ரோபோக்களைப் பயன்படுத்தி நோயாளர்களது நோயின் தன்மையைக் கண்டுபிடிக்கவும் அதற்கேற்ப சிகிச்சை வழங்கவும் முடியும். இந்த ரோபோ  நோயாளி (ஏதட்ச்ண கச்tடிஞுணt குடிட்தடூச்tணிணூ) சராசரியான நோயாளியொருவரின் குறைபாடுகளுக்கான பல்வேறு அறிகுறிகளைக் காட்டக் கூடிய வகையிலே இந்த ரோபோக்களின் செயற்பாட்டுத் திட்டம் நிரல்படுத்தப்பட்டுள்ளது.

சுவாசம், ஒட்சிசனை உள்ளெடுத்து , காபனீரொட்சைட்டை வெளிவிடல்), நாடி, நாளம் மற்றும் இதயத் துடிப்புகள், இரத்த அழுத்த அளவீடுகள் என ஒவ்வொன்றும் மனிதனைப் போல இடம்பெறுவதுடன் அவற்றினை பரிசோதனை செய்தும்  பார்க்கக் கூடியதாக உள்ளன.
 அதேபோல ஒளிக்கேற்ப உறுத்துணர்ச்சி காட்டல் அதிக ஒளி தாக்கினால் கண்களை மூடிக் கொள்ளல் , கண் அசைவுகள் போன்றவற்றையும் இந்த ரோபோக்கள் செய்கின்றன. சிகிச்சைகளுக்கு ஏற்ப நோயின் தன்மையை வெளிப்படுத்தல் மற்றும் சரியான மருத்துவக் கண்காணிப்புகளுக்கேற்ப அறிகுறிகளை சரி செய்தல் போன்றவையையும் இந்த ரோபோக்கள் செயற்படுத்துகின்றன.

 செக்கனுக்கு செக்கன் வேறுபட்ட சிகிச்சைகளுக்குரிய விளைவுகளை கணினி முறைமையினூடாக  கட்டுப்படுத்தக் கூடியதாக உள்ளமையே இந்த ரோபோக்களின் சிறப்பாகும்.

உதாரணமாக, நரம்பு மூலமாக மருந்து வழங்கல் மற்றும் சுவாசச் சுற்றோட்டம் போன்ற நடைமுறைகளுக்கு நோயாளி ரோபோக்களால் (இககீ) பதிலளிக்க முடியும். இந்த முறையிலே மருத்துவ மாணவர்களால் விடப்படும் தவறுகளால் ஏற்படும் உயிர் ஆபத்துகள் மற்றும்  அங்கவீனங்கள் தவிர்க்கப்படுகின்றன. அதேவேளை, முக்கியமான நிஜ வாழ்க்கைச் சூழலைக் கையாளவும் மருத்துவத்தின் மகத்துவத்தையும் சிறப்புத் தன்மையையும் மருத்துவ மாணவர்களுக்கு தெளிவாக உணர்த்தவும் முடியும்.
புதிதாகத் திறக்கப்பட்ட ஸ்காட்டிஷ் மருத்துவ உருவகப்படுத்துதல் மையத்தில் வைத்து ஏச்ணூஞீ ச்ணஞீ ண்ணிஞூt ணூதஞஞஞுணூடிண்ஞுஞீ ணீடூச்ண்tடிஞி  மூலப் பொருட்களை கொண்டு இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் கம்பிகள், மோட்டார்கள், குழாய்கள், ரப்பர் குழாய்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் கணினி சிப் போன்றனவும் இந்த ரோபோக்களுள் பொருத்தப்பட்டுள்ளன.

 லார்பேட்டிலுள்ள ஃபோர்த் வெல்லி ரோயல் மருத்துவமனையில் (ஊணிணூt ஙச்டூடூஞுதூ கீணிதூச்டூ ஏணிண்ணீடிtச்டூபயிற்சி பெறும் மாணவர்களுக்கு உதவியாக இந்த ரோபோக்கள் வழங்கப்படவுள்ளதாக வடிவமைப்பாளர் டாக்டர் டோனா பர்ஸர் தெரிவித்துள்ளார்.
 இம்மாணவர்கள் ரோபோக்களில் மேற்கொள்ளும் செயல்முறை பயிற்சிகளின் மூலம் பயனுள்ள நடைமுறை அனுபவங்களைப் பெற்றுக் கொள்வார்களென டோனா நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.




 புத்தகங்களிலுள்ளவற்றை வாசித்துக் கற்பதை விட கற்றல் உபகரணங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் செயல் முறைப் பயிற்சிகளின் மூலம் தெளிவான அனுபவ அறிவினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இதேவேளை, நாம் ஏனையவருடன் பேசுவதைப் போல இந்த ரோபோக்களும் பேசக் கூடிய வகையிலே குரல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன  எனவும் டோனா தெரிவிக்கின்றனர்.
இஅஉ  சுகாதார பாதுகாப்பு அமைப்பினால் வடிவமைக்கப்பட்ட இவை உயர் தொழில் நுட்ப ரீதியான ரோபோ குடும்ப உறுப்பினர் வகைகளில் ஒன்றாகும். ( டடி tஞுஞிட ஞீதட்ட்டிஞுண்) .

 அவசர பிரிவு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ தாதியர்கள் பயிற்சி பெற உதவும் இந்த ரோபோக்கள் குருதி வழங்கல் மற்றும் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தக் கூடியவையாகவும் உள்ளன. இதேவேளை, கர்ப்பிணிப் பெண் , இரு சிறுவர்கள் மற்றும் பிறந்த சிசு போலவும் ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உண்மையான கர்ப்பிணிப் பெண் ,பிறந்த குழந்தை ஆகியோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், கோளாறுகள் என்பவற்றை இந்த ரோபோக்களும் வெளிப்படுத்துகின்றமை சிறப்பு அம்சமாகும்.

 16 இறாத்தல் நிறையுடைய "சிம்' எனப் பெயரிடப்பட்டுள்ள ரோபோ குழந்தை கெஞ்சுதல், அழுதல், சிரித்தல் , பயப்படுதல் , வாயில் எச்சில்  சுரத்தல் , கண்களிலிருந்து கண்ணீர் வெளியாகுதல் போன்ற செயல்களையும் செய்கின்றது. அதேவேளை, அசைவுகள் மற்றும் மூச்சு வாங்குதல் போன்ற  உணர்வுகளின் வெளிப்பாடுகளும் சிம்மிடம் உள்ளன

சிம்மினை பார்ப்பவர்களுக்கு அதுவொரு உண்மையான குழந்தை என்ற எண்ணமே ஏற்படும். ரோபோ குழந்தையில் பொருத்தப்பட்டுள்ள இறப்பர் குழாய் மாதிரிகளினூடாக சுவாச நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.
நோயாளியின் பாதுகாப்பு மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள  இந்த ரோபோக்கள் மூலம் மருத்துவ மாணவர்கள் சிறப்பான பயனைப் பெறுவார்கள் என அமைப்பின் பணிப்பாளர் டாக்டர் மிக்கேல் மனிபெனி தெரிவித்துள்ளார்.

சா. சுமித்திரை