வியாழன், 21 பிப்ரவரி, 2013

கொலையாளிகள், பாலியல் குற்றவாளிகள் மூளையின் உட்பகுதியினுள் இருண்ட படை


கொலையாளிகள் , பாலியல் குற்றவாளிகள் போன்றோரின் மூளைகளிலுள்ள இருண்ட படலம் பகுதியொன்றை நரம்பியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 குற்றவியல் வன்முறை எண்ணம் கொண்டவர்களின் மூளைப் பகுதியை ஸ்கான் செய்து பார்க்கும் போது மூளையில் இருண்ட படலப் பகுதி வெளிப்படுத்தப்படுமென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். கொலையாளிகள்பாலியல் குற்றவாளிகள், வன்முறையாளர்கள் மற்றும் கொள்ளையர்கள் என ஒவ்வொரு வகைக் குற்றவாளிகளின் மூளைப் பகுதியிலும் இருண்ட படலப் பகுதியொன்று காணப்படுவதாக ஜேர்மன் நரம்பியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எக்ஸ்  ரேயிலுள்ள ஒரு வெகுஜன கரும் பகுதி போல மூளையின் மத்திய மடல் பகுதியிலேயே இந்த இருண்ட பகுதியுள்ளதென விஞ்ஞானியான டாக்டர் ஜேர்கார்ட் ரோத் தெரிவித்துள்ளார்.
வன்முறை தொடர்பான குற்றச்சாட்டில் சிறைக் கைதிகளாகவுள்ளவர்களை மையப்படுத்தி ஜேர்மன் அரசின் ஆய்வுகளுக்காக நீண்ட காலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் ஆய்வுகளின் போதே ஜேர்கார்ட் மூளையின் இருண்ட பகுதியை கண்டுபிடித்தார்.
நாம் கைதிகளுக்கு சில குறும்படங்களை காண்பிப்பதுடன்  அதன் பின்னர், அவர்களுடைய மூளையின் அலைகளை அளவிட்டு கண்காணிக்கின்றோம்குறும்படங்களில் வரும் மிருகத்தனமானதோ , கொடூரமானதோ அல்லது ஆபாசக் காட்சிகளின் போதோ அவர்களின் மூளையின் இருண்ட பகுதி சொல்ல முடியாதளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றது. ஆனால், அக் காட்சிகளில் வரும் கருணை, இரக்கம், சோகம் போன்றவற்றிற்கு மூளையின் இருண்ட பகுதி எவ்வித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தவில்லை.
மூளையின் இருண்ட பகுதியென ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் பகுதியில் குற்றவியல் வன்முறைகளுக்கான பதிவுகள் உள்ளதென ஜேர்கார்ட் கூறுகின்றர். சில குற்றவாளிகளின் வன்முறைகளுக்கு மரபியல் காரணங்கள்
 இருக்க வேண்டுமெனவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் மூளைப் பகுதியை ஸ்கான் செய்து பார்க்கும் போது அவர்களின் மூளையின் கீழ் நெற்றிப் பகுதியில் ஒரு கருமையான பகுதி இருக்குமென ஜேர்கார்ட் கூறியுள்ளார்.
சில வேளைகளில் அப்பகுதியில் காயமோ அல்லது கட்டிகளோ ஏற்படுமாயின் அதனாலேயே குற்றவாளியாக உருவாகும்  வாய்ப்பு காணப்படுகின்றது. ஆனால் மூளையின் பகுதியில் உருவாகும் கட்டிகளை சத்திர சிகிச்சையினூடாக அகற்றி அல்லது காயத்தைக் குணப்படுத்தினாலே குறித்த நபர் குணமடைந்து வக்கிர குணமற்ற மனநிலை அடைந்து விடுவார். இல்லையெனில் அந்நபரின் மூளை திறம்பட செயற்படமாட்டாது. எனவே, குற்றவாளிகளாக மாறும் வாய்ப்பு உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிச்சயமாக இது தானாக செயற்படாது . ஆனால், முளையுடன் தொடர்புடைய வன்முறை போக்குகளை ஒரளவு கட்டுப்படுத்த முடியும்என்பது, பல்வேறுபட்ட  மேலோட்டமான  உணர்ச்சிகள்  இரக்க குணம் இல்லாமை, சூழ்ச்சித் திறன், பொறுப்பற்ற தன்மை, திடீர் உணர்ச்சிகள் , மூக விரோத  நடத்தைகள் மற்றும் ஒட்டுண்ணி வாழ்க்கை போன்ற ஆளுமைக் கோளாறுகளாகும்.

 மூளையின் முன் நெற்றியின் கீழ் இருண்ட பகுதி உள்ளவர்களில் 66 வீதமானோர் வன்முறை உணர்வுகளை கொண்டுள்ளனர். இந்த பரிசோதனை மூலம் ஆரம்பத்திலேயே சமூக விரோத நடத்தை  கொண்டவர்களை எளிதாக இனங்காண முடியுமெனவும் டாக்டர் கூறுகின்றார்
எனவே, இக்கோளாறு கொண்டவர்களை இளம் பராயத்திலே  இனங்கண்டு  பெற்றோர்களின் அன்புடன் சீர்திருத்தங்களை மேற்கொள்வதனூடாக அவர்கள் எதிர்காலங்களில் ஆரோக்கியமான மனநிலையுடன் செயற்படுவார்கள் எனவும் ஆராய்ச்சிக் குழு உறுதிப்பட கூறுகின்றது.

சா. சுமித்திரை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக