புதன், 4 ஜூலை, 2012

சமூகங்களை ஒன்றிணைக்கும் சமூக இணையத்தளங்கள்

இன்றைய இளைஞர்கள் இருந்த இடத்திலேயே சமூக இணையத்தளங்கள் மூலம் முழு உலகினையும் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய சமூக வலைத்தளங்கள் உலகின் எந்தவொரு மூலையிலும் உள்ள அனைத்து சமூகத் தரப்பினரையும் எந்தவித வயது வித்தியாசமும் இன்றி ஆட்கொண்டுள்ளதுடன் அவர்களின் பொழுது போக்கும் மையமாகவும் செயற்பட்டு வருகின்றன என்றால் மிகையாகாது.
இத்தொழில்நுட்ப யுகத்திலேயுள்ள இளம் சமூகத்தினரிடையே உள்ள யாராவது ஒருவருக்கு வங்கிக் கணக்கு இல்லாமல் இருக்கலாம் ஆனால், சமூக இணையத்தளங்களுக்குரிய கணக்கு இல்லாமல் இருக்காது. அந்த அளவுக்கு சமூக இணையத்தளங்கள் பிரபல்யம் பெற்றுள்ளன. பேஸ்புக் (ஞூச்ஞிஞுஞணிணிடு) டுவிட்டர் (கூதீடிttஞுணூ) மை ஸ்பேஸ் (ட்தூ ண்ணீச்ஞிஞு) லிங்ட்  இன் பிலிக்தர் (ஞூடூடிஞிடுஞுணூ)  என பல வகையான பெயர்களில் சமூக இணையத்தளங்கள் இணையங்களில் உலா வருகின்றன. அவற்றில் ஒவ்வொருவரும் தமது வசதி, தேவை போன்றவற்றுக்கேற்ப அவற்றில் இணைந்துகொண்டு சேவையினை தாராளமாகப் பெற்று வருகின்றனர்.
இச்சமூகத்தளங்களின் பாவனை தற்பொழுது இளைஞர்களின் மத்தியிலே அசுர வேகத்தில் அதிகரித்துக் கொண்டு வருகின்ற அதேவேளை அவை தொடர்பான பிரச்சினைகளும் சர்ச்சைகளும் அதேவேகத்திலே அதிகரித்து வருகின்றன என்ற உண்மையையும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக இச் சமூக இணையத்தளங்களில் உலா வரும் போது தனிநபர் ஒருவரது தகவல்களை பயன்படுத்துவது,  அத்தகவல்களை திருடி இன்னொருவருக்கு விற்றல், பயனாளர்களின் சுதந்திரத்தில் தலையிடுதல், தெரியாதவர்களுடன் அளவுக்கதிகமாக உரையாடுவது இவற்றை தவிர இத்தளங்களின் அதீத பாவனைகளின் போது ஏற்படுகின்ற அர்த்தமற்ற காதல், கல்வியில், தொழிலில் ஏற்படுகின்ற தடைகள் என வாழ்க்கையையே தலைகீழாக மாற்றும் சம்பவங்கள் நாள்தோறும் பல்வேறு இடங்களில் இடம்பெற்று வருகின்றன. மேலும் சமூகத் தளங்களில் அதிகளவு நேரம் செலவிடுபவர்கள் மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர் என அறிவியல் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதேபோல் உடல் ரீதியான பாதிப்புகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் உருவாக வழிகோலுகின்றன. இவற்றை போல சமூக இணையத்தளப் பாவனையால் ஏற்படுகின்ற எத்தனையோ பிரச்சினைகளையும் சர்ச்சைகளையும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே போகலாம்.
இதனால்தான் என்னவோ எமது மூத்த சமூகத்தினர் இச்சமூகத்தளப் பாவனை பற்றி அதிருப்தி தெரிவிக்கின்றனர். இவர்கள் இளைய சமூகத்தினர் மத்தியில் இதற்கு சிறிதும் ஆதரவு வழங்காது இருக்கின்றனர். இதன் விளைவாக எங்கேயோ ஒரு இடத்தில் இவற்றின் பாவனையால் ஏற்பட்ட பாதிப்பை  ஏதோவொரு வழியில் அறிந்து கொண்டால் உடனே தங்களுடைய வீட்டிலேயே அச்சம்பவம் இடம்பெற்றுள்ளது போல எண்ணி வானுக்கும் மண்ணுக்கும் குதிக்க ஆரம்பித்து விடுவார்கள். இது இளைய சமூகத்தினர் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாகவே ஏற்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். எனினும் எந்தவொரு செயல்களுக்கும் நன்மை, தீமை என இருபக்கம் உண்டு. ஒரு பொருள் பாவனை என்றாலும் சரி அல்லது பொதுவான வாழ்வியல் பழக்கவழக்கங்கள் என்றாலும் சரி அனுகூலங்களுக்குச் சமனான பிரதி கூலங்கள் உள்ளன என்பதை அனைத்து பெற்றோரும் மூத்த சமூகத்தினரும் உணர வேண்டும். இவர்கள் தீமைகளை மட்டும் இனங்கண்டு விட்டு அவற்றினை தடை செய்வதில் எந்த நியாயமும் இல்லை. அவற்றினால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதும் இல்லை.

இத்தகைய சமூகத்தளங்கள் மூலம் எத்தனையோ பேர் தமது வாழ்க்கைக்கு ஒளியேற்றி வருகின்றனர். குறிப்பாக மக்களுக்கு வேலை வாய்ப்புகளைத் தேடித்தரும் அரிய பல உதவிகளை இச்சமூக வலையமைப்புகள் செய்து வருகின்றன. அண்மையில் இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக இணையத்தளங்கள் மூலம் 14.4 மில்லியன் பேர் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 8.3 வீதத்தினர் தமது வாழ்வின் வெற்றிக்கு பேஸ்புக் என்னும் சமூகத்தளம் உதவி உள்ளது என மனதார வாழ்த்துகளை வெளிப்படையாக தெரிவித்திருந்தனர்.
பேஸ்புக் சமூகத்தளத்தை அதன் நிறுவுனர் மார் சுகேபேரி (ட்ச்ணூடு த்தஞிடுஞுணூஞஞுணூதூ) தனது கல்லூரித் தோழர்களை ஒன்றிணைக்கும் விதமாகவே உருவாக்கினார். எனினும் பின்பு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக பல கூறுகளை இணைத்து தனித்தனியாக ஒவ்வொரு தேவைகளையும் ஒருமுகப்படுத்தி மக்கள் பாவனைக்காக விட்டார். இன்று சமூகத் தளங்கள் மூலம் 500 மில்லியன் பாவனையாளர்கள் பயனடைகின்றனர். இவற்றின் மூலம் இளமைப் பருவங்களில் தொலைத்த பல பழைய நண்பர்களைத் தேடி புதிய நட்புப் பாலத்தை உருவாக்கலாம். பழைய நினைவுகளை மீண்டும் புதுப்பிக்கலாம். பிரிந்த உறவுகள் மீண்டும் இனிமையாக இணையலாம் என பல பரிமாணங்களைக் கொண்ட பயன்கள் அனைத்து மட்டத்தினருக்கும் கிடைத்து வருகின்றன.
தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்குநாள் முன்னேறி வருகின்றமையால் தற்போதைய கல்வி முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று பல தனியார்  கல்வி நிறுவனங்கள் மட்டுமன்றி அரச கல்வி நிறுவனங்களும் தமது கற்பித்தல் நடவடிக்கைகளை இச்சமூகத்தளங்கள் மூலம் மேம்படுத்தி வருகின்றன. அதேபோல் பல விளம்பர நிறுவனங்கள் தமது பொருட்களைக் காட்சிப்படுத்தவும் அறிமுகப்படுத்தவும் இவற்றினை பயன்படுத்துகின்றன. இச் சமூகத்தளங்கள் மூலம் இலவச வைத்திய, மனநல ஆலோசனைகள், அழகு, சமையல் குறிப்புகள், ஆன்மீக விடயங்கள், பொது விடயங்கள் என பலவற்றை உடனுக்கு உடன் தொகுத்தும் தனித்தும் தகவல்களைப் பெற உதவி செய்து வருகின்றன. இதனைப் போல எத்தனையோ அனுகூலங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
எனவே இத்தகைய சமூகத் தளங்களை ஆரோக்கியமான முறையிலே பயன்படுத்தி சமூகப் பயனுள்ள திட்டங்களைச் செய்ய வேண்டும். இதனை விடுத்து வெறுமனே பயனுள்ள வெட்டிப் பேச்சுகளுக்கும் பொழுது போக்கு விடயங்களுக்கும் முன்னுரிமையளிப்பதை தவிர்க்க வேண்டும். இதனை விட சில சமூகத் தளங்களை வெளிப்படுத்தும் அவற்றின் உரிமை நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை விற்று அதன் மூலம் இலாபம் சம்பாதிக்கும் நிலையும் காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பிலும் அனைவரும் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
எமக்கு எது நன்மையளிக்கக்கூடியது, எது தீமை தரக்கூடியது என இனங்கண்டு கொள்ள முடியாது ஆளுமை இல்லாத சிறுவர்களும் ஏன் வயது வந்தவர்களும் கூட இச்சமூகத்தளங்கள் தரும் அளவற்ற சுதந்திரத்தைப் பயன்படுத்தி பாலியல் ரீதியாகவும் வேறு பல வழிகளாலும் சுரண்டப்படுவதற்கும் தவறான எண்ணங்களால் வழி நடத்தப்படுவதற்கும் அச்சுறுத்தப்படுவதற்கும் வாய்ப்பு க்கள்காணப்படுகின்றன. இதனால் தான் சமூக இணையத்தளங்களால் ஏற்படும் பிரச்சினைகளும் சர்ச்சைகளும் எமது சமூகத்தினர் மத்தியிலும் ஊடகங்களிலும் தலைப்புச் செய்திகளாக அடிக்கடி பேசப்படுகின்றன.
இத்தகைய சமூகங்களை ஒன்றிணைக்கும் சமூகத்தளங்களின் பாவனை அதிகரிக்க பல காரணங்கள் உள்ளமையாலேயே அவற்றிற்குள்ள வரவேற்பு குறைவதில்லை. உதாரணமாக ஏனையவர்களுடன் தொடர்பாடுதல், வாழ்க்கையில் ஏற்படும் சிறுசிறு சுவாரசியமான விடயங்களை நண்பர்களுடன் பகிர்தல், பலரிடமும் எம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளல், எமது ரசøனைகள், திறமைகள் போன்றவற்றை பலர் மத்தியில் வெளிப்படுத்தல் என பலவற்றுக்கு இவை தளமாக காணப்படுகின்றன. எனவே நாம் பயனுள்ள வழிகளில்  இவற்றை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை இனங்கண்டு பாதுகாப்பாக பயன்படுத்தினால் எல்லோருக்கும் நன்மை கிட்டும்.

சா.சுமித்திரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக