சனி, 6 ஜூலை, 2013

முர்சியின் ஆட்சிக் கவிழ்ப்பும் எகிப்தின் எதிர்கால ஆபத்தும்



h.சுமித்திரை


வடஆபிரிக்காவிலுள்ள குடியரசு நாடுகளிலொன்றான எகிப்தில் மீண்டும் ஒரு இராணுவ புரட்சி முலமான ஆட்சிக்கவிழ்ப்பும்,இடைக்கால தலைவரின் பதவியேற்பும் கடந்த ஒரு வார காலத்திற்குள் இடம் பெற்று முடிந்துள்ளது.

முர்சியின் ஒரு வருட ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், முஸ்லீம் சகோரத்துவ அதிகாரமும் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து,அக்கட்சியின்; எதிரணியினரின் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றன. ஆனால்,அக்கொண்டாட்டங்கள் குறுகிய காலத்தினைக் கொண்டதாகவே அமைந்திருக்க போகின்றன. அத்துடன் பரந்த மத்திய கிழக்கில் எகிப்திற்கு ஒரு ஆபத்தான தருணமாகவே பார்க்கப்படுகின்றதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.






கடந்த 2011 இல், ஜனாதிபதியாகவிருந்த கொஸ்னி முபாரக்கிற்கெதிராக பொதுமக்கள் புரட்சி ஏற்பட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டது. முபாரக்கிற்கெதிரான மக்கள் புரட்சிக்கு தலைமை வகித்தவரே இந்த முர்சி தான்.  அதனைத் தொடர்ந்து ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தலில், புதிய ஜனாதிபதியாக முகமது முர்சி தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியான முர்சியும் அந்நாட்டு இராணுவம் பதவியிலிருந்து வெளியேற்றியுள்ளதுடன், நாட்டின் புதிய இடைக்கால ஜனாதிபதியாக தலைமை நீதிபதி பொறுப்பேற்றுள்ளார்.

முர்சி; ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அரசியல் மறுசீரமைப்பு என்ற பெயரில் தனக்கு அளவில்லாத அதிகாரத்தினை வைத்திருக்கும் முறையினைக் கொண்டு வந்தார் .அவரின் இந்த தான்தோன்றித்தனமான போக்கு பொதுமக்களிடையே பலத்த ஏமாற்றத்தினை ஏற்படுத்தியது.

இந்த ஏமாற்றத்தின் பிரதிபலிப்பாக மக்கள் தொடர்ச்சியாக தமது அதிருப்தியை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். இந்நிலையில் முகமது முர்சி பதவியேற்று ஒராண்டு நிறைவு தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதன்போது,  முர்சியின் முஸ்லிம் சகோரத்துவக் கட்சியினரும்,எதிர்க்கட்சியினரும் மோதலில் ஈடுபட ஆரம்பித்தனர். இக்கலவரத்தில் அமெரிக்க பிரஜையான மாணவனொருவன் உட்பட 8 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இதேவேளை தலைநகர் கெய்ரோ,அலெக்சாண்டியா உள்ளிட்ட நகரங்களில் அணிதிரண்ட இலட்சக்கணக்கானோர் முர்சி பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர். ஒரு தொற்றுநோய் போல தொடர்ந்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது முஸ்லிம் சகோரத்துவ கட்சி அலுவலகங்கள் மீது தீ வைக்கப்பட்டன. ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற் கொண்டனர். இதில் 16 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

அதேசமயம் மக்கள் புரட்சியின் ஒரு  உச்சக்கட்டமாக  ஆர்ப்;பாட்டங்களை பதிவு செய்யவென சென்ற டச்சு நாட்டைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளரொருவர் மிகமோசமான முறையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருந்தார். கூட்டத்திற்கு நடுவிலே ஐந்து பேர் கொண்ட குழுவொன்றினால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட அப்பெண் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமுகத்திற்கு பொறுப்பு மிக்க சேவையாற்றுபவரே ஊடகவியாலாளர். சமுகத்தின் தேவை,உரிமைகளை பாதுகாக்கவும் நீதியை பெற்றுக் கொடுக்கவுமென செய்தி சேகரிக்க சென்ற அதுவும் வேறொரு நாட்டைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளர் மீதான காட்டுமிராண்டித்தனமான இச்செயற்பாடு அந்நாட்டின் மக்கள் புரட்சியையே அர்த்தமற்றதாக்கியுள்ளது.

ஒரு நாட்டின் ஆட்சிக்கெதிராக மக்கள் புரட்சி ஏற்படுமாயின், அந்தளவிற்கு பொதுமக்கள் பல்வேறு ரீதியில் அடக்கி ஆளப்படுகின்றனர் என்பதேயாகும்.ஆனால் அப்பெண் மீதான இழிவான செயற்பாடு உண்மையிலே, அந்நாட்டு மக்கள் தமது உரிமைகளுக்காவே போராடுகின்றனரா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.


மேலும், இலட்சக்கணக்கானோர் ஒன்று திரண்ட அந்தவொரு இரவில் மட்டும் மொத்தம் 41 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்க கூடிய விடயமாகும்.இதுபோன்ற வன்முறைச்சம்பவங்கள் வலுவடைந்ததைத்தொடர்ந்து முர்சியை பதவி விலகுமாறு அந்நாட்டு இராணுவம் எச்சரிக்கையை விடுத்தது.

ஆயினும், இராணுவம் விடுத்த இறுதி எச்சரிக்கையை முர்சி நிராகரித்தால் அங்கு மேலும் பதற்ற நிலைமை அதிகரித்திருந்தது. அத்துடன்,  திங்கட்கிழமை முர்சிக்கு 48 மணிநேர கெடு எதிர்கட்சியினரால் விதிக்கப்பட்டது.


இந்நிலையில், ஆர்ப்;பாட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது கமெல் ஆமர்,சுற்றுலாத்துறை அமைச்சர் ஸிஹாம் சாசூ, நீதி மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஹாதம் பகாடொ, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆதப் ஹில்மி உட்பட 5 முக்கிய பதவி அமைச்சர்கள் தமது பதவியை இராஜினாமா செய்தனர்.

இதனைத்தொடர்ந்து முர்சியின் ஆட்சி ஆட்டங்காண ஆரம்பித்தது. இந்நிலையில்,முர்சியை பதவி விலகுமாறு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கையில் எவ்விதமான உள்நோக்கமோ பேரமோ கிடையாது. நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கும் கடமை இராணுவத்திற்கு உள்ளது. எனவேதான் இந்த மக்கள் புரட்சியில் இராணுவ தலையீடு காணப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் அப்துல் பதேஎல் சி;ஸ்சி குறிப்பிட்டிருந்தார்.

இதனைத தொடர்ந்து மேற் கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையினால் முர்சியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற மோதல்களில் 50 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.முஸ்லீம் சகோதரத்துவக்கட்சியை சேர்ந்த 300பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலருக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கபப்ட்டுள்ளது.

இதேவேளை முர்சி ஆதரவாளர்களுக்கும்இ எதிரணியினருக்குமிடையே மோதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமையால் அங்கு மேலும் பதற்றமான அச்ச நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில். வுpயாழக்கிழமை தலைநகர் கெய்ரோவில் நடந்த ஒரு நிகழ்வில் அரசியல் சாசன நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அத்லி மன்சூர் இடைக்கால ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். எதிர்வரும் தேர்தல் வரை அத்லியே ஜனாதிபதியாக செயற்படுவாரென இராணுவம் அறிவித்துள்ளது.





தற்போது, எகிப்திற்கு நிச்சயமாக மேற்கத்திய நாடுகளின் ஆதரவும் கிடையாது.உள்ளுர் மதசார்பற்ற அமைப்புக்களின் ஆதரவுமில்லை. எனவே, வடகொரியா,  ஈரான், போன்ற தேசமாக பார்க்கப்படும் நிலையும் ஏற்படலாம்.


அதேநேரம் வெள்ளிக்கிழமை முர்சியின் பதவி கவழ்க்கப்பட்டமைக்கு எதிராக அவருடைய ஆதரவாளர்களால் திட்டமிட்ட நிலையில் அந்நாட்டு இராணுவம் தேசிய நல்லிணத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.முர்சிக்கு இன்னமும் கணியமான ஆதரவு இருபடபதாக அவரது கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ள போதிலும்,அவருடைய எதிரணியினரும் வீதிகளில் இறங்கி போராட தயாராகி விட்டனர்

இஸ்லாமிய அரசியலின் பிறப்பிடமான எகிப்தில், எப்போதும் மதச்சார்பற்ற ஆட்சியாளர்களை எதிர்க்கும் வகையில் வன்முறைகளை தூண்டி விடவோ அல்லது அத்தகையோருக்கு சட்டபூர்வமாகவே அதிகாரத்தினை இல்லாதொழிக்கவோ சில இஸ்லாமிய வட்டாரங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

எகிப்தின் தற்போதைய நிலைமை எதிர்காலத்தில் பாரியதொரு அபாயத்தினை நிலைநிறுத்தப் போகின்றதென முஸ்லீம் சகோதரத்துவ  அமைப்பின் பிரிட்டன் பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எகிப்தியர்கள்  அனைத்தும் விடயங்களையும் தங்கள் கைகளாலே எடுத்துக் கொள்கின்றமை மிக பெரிய அச்சம தரக் கூடிய விடயமாகும்.கடந்த ஜனாதிபதி தேர்தலில் மில்லியன் கணக்கானோர் வாக்களித்து முர்சியை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். நாம் அதனையொரு ஜனநாயகம் என நினைத்தோம். ஆனால் நாம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளோமெனவும் அவர் தெரிவித்தார்;. இக்கருத்தினை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஸ்ராபோர் சர்வதேச புலனாய்வு குழு ஆய்வாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.



அரபு வசந்தத்தின் இன்னொரு பகுதியாக எகிப்தில் அரங்கேறியுள்ள இந்நிகழ்வுகள் சர்வதேச அரசியல் பெரியளவில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.ஜனநாயக அமைப்பில் சர்ச்சைகளை தீர்க்க இந்த மக்கள்  புரட்சியும் ஆட்சி கவிழ்ப்பும் ஒரு வழியாகவுள்ள போதிலும் எகிப்திய இராணுவ தலையீட்டிற்கு தாம் ஆதரவு வழங்க முடியாததென பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


எகிப்திய இராணுவத்தின் நடவடிக்கை மிகவும் ஆழ்ந்த கவலையளிக்கும் விடயமாகும். அதேசமயம் எகிப்தியர்கள் ஜனநாயக ரீதியான அரசாங்கத்தினை அமைக்க அழைப்பு விட வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளதுடன், எகிப்திய ஜனாதிபதி முகமது முர்சி இராணுவத்தினரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு தனது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் எகிப்தில் ஜனநாயக ஆட்சி நடைபெற வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே,பொது வாக்கெடுப்பு நடத்தி மீண்டும் ஜனநாயக ஆட்சிமுறையைக் கொண்டு வர வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு போலியானதொன்று என்பதை எகிப்தியர்கள் கண்டுபிடித்துள்ளனர். இஸ்லாமிய அரசியல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சிரிய ஜனாதிபதி பஸார் அல்-அசாத் தெரிவித்துள்ளார்.

பஸாருக்கெதிரான சிவில் யுத்தம் உள்நாட்டிலேயே மிகவும் கடுமையாக நடைபெற்று வரும் நிலையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமையானது, அரபுலகில் பஸாருக்கான ஆதரவு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் மு~hரப்பிற்கு பின்னரான கடந்த ஒரு வருட காலப்பகுதியிலும் எதுவும் உருப்படியாக நடைபெறவில்லை என்பதை கடந்த வாரம் சம்பவங்கள் நிருபித்துள்ளன.. ஆட்சி பொறுப்பேற்ற முஸ்லீம் சகோதரத்துவ கட்சியினர் நாட்டில் பண்பாட்டு புரட்சியை அமைதியாக ஏற்படுத்துவதாக கூறினர். போதைவஸ்து பாவனையிலிருந்து மக்களையும் நாட்டையும் பாதுகாக்கும் திட்டங்களை வகுத்து செயற்படுத்தினர்.

பூச்சிய நிலையிலிருந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அரச செலவீனங்களை குறைத்து மாற்றுத்திட்டத்தினை செயற்படுத்தினர். இதுபோன்ற திட்டங்கள் முன்னேடுக்கப்படுவ்தாக சர்வதேச ஊடகங்களுக்கு முர்சி தலைமையிலான அரசு காண்பித்திருந்தது. ஆயினும் நாட்டின் பொருளாதாரத்தினை சீர்படுத்துவதிலுத் பாதுகாப்பு விடயத்திலும் முர்சி சரியாக செயற்படவில்லையெனக் கூறியே அங்கு போராட்டம் வெடித்தது.

தற்போது, எகிப்திற்கு நிச்சயமாக மேற்கத்திய நாடுகளின் ஆதரவும் கிடையாது.உள்ளுர் மதசார்பற்ற அமைப்புக்களின் ஆதரவுமில்லை. எனவேஇ வடகொரியா, ஈரான், போன்ற தேசமாக பார்க்கப்படும் நிலையும் ஏற்படலாம்.

 


ஏகிப்தியர்கள் அரசியலை தம் கைகளில் எடுத்துள்ளனர். அவர்களுடைய தேவைகளை தாமே நிறைவேற்றிக் கொள்வார்களா என பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக